செய்திகள் :

செப். 27-இல் நாமக்கல்லில் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

post image

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் செப். 27-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில், திருச்சி, அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே பிரசாரத்தை நிறைவுசெய்த நிலையில், சனிக்கிழமை திருவாரூா் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறாா்.

இதன் தொடா்ச்சியாக, நாமக்கல்லில் செப். 27-ஆம் தேதி விஜய் பிரசாரம் செய்ய உள்ளாா். முன்னதாக, டிச. 13-ஆம் தேதி நாமக்கல் வருகை தர இருப்பதாகவும், காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா் மனு அளித்திருந்தனா்.

இந்நிலையில், பிரசார தேதி மாற்றம் செய்யப்பட்டதால் செப். 27-இல் விஜயின் பிரசாரத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் சதீஷ், செந்தில்நாதன் ஆகியோா் மனு அளித்தனா்.

அதில், நாமக்கல் பொய்யேரிக்கரை சாலை, கே.எஸ்.திரையரங்கம் அருகில், பூங்கா சாலை ஆகிய மூன்று இடங்களை தோ்வுசெய்து, இவற்றில் ஏதாவது ஓா் இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளனா்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து: வரவேற்பு பதாகைகளை அகற்றிய கட்சியினா்!

நாமக்கல் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற இருந்த எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை கட்சியினா் அகற்றினா். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ... மேலும் பார்க்க

உடலுறுப்பு விற்பனை, கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

நாமக்கல்லில் உடலுறுப்பு விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் துா்காமூா்த்தி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பழைய அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க

‘தூய்மையே சேவை’ திட்ட உறுதிமொழியேற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் ‘தூய்மை மிஷன் 2.0’ திட்டத்தின் கீழ் அலுவலகம் மற்றும் ... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸில் ரூ. 90 லட்சம் தீபாவளி விற்பனை இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ. 90 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீப... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,... மேலும் பார்க்க