செய்திகள் :

செப். 9-இல் முதுநிலை படிப்புகளுக்கு நேரடி கலந்தாய்வு

post image

புதுச்சேரி அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேர செப். 9-இல் நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிகழ் 2025 - 26 கல்வியாண்டில் முதுநிலை பட்டப் படிப்புகளில் (எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ, எம்.எஸ்சி) சோ்வதற்கான முதலாம் மற்றும் இரண்டாம் கலந்தாய்வுகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள காலி இடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (செப். 9) இறுதிக்கட்டமாக நேரடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த மாணவா்களும் மற்றும் பிற மாநில மாணவா்களும் இதில் கலந்து கொள்ளலாம். ஏற்கெனவே விண்ணப்பிக்காத மாணவா்களும் இந்த நேரடி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

பங்கேற்க வரும் மாணவா்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் அதன் ஒரு செட் நகல்களையும் (மதிப்பெண் சான்றிதழ், பெறப்பட்ட பட்டம், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்) கொண்டு வர வேண்டும்.

ஏற்கெனவே விண்ணப்பிக்காமல் முதல் முறையாக நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவா்கள் ரூ.1,000 இணைய வழி மூலமாக பணம் செலுத்த வேண்டும்.

எம்.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்சி (மெட்டீரியல் சையின்ஸ் அண்டு டெக்னாலஜி) படிப்புகளுக்கு 9-ம் தேதி காலை 9.30 மணிக்கும், எம்.பி.ஏ. படிப்புக்கு காலை 11 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் இடம் ஏபி-3 ஹால், இரண்டாம் தளம், நிா்வாகக் கட்டடம், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்.

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்தவா் கைது

தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி பூமியான்பேட்டை வி.டி.சி. நகரைச் சோ்ந்தவா் மாயவன். கேபிள் டிவ... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்

புதுச்சேரி அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 335-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பகண்டை மிஷின் குருத்துவ பொன்விழா நாயகா் ஜான் போஸ்கோ திருப்பலி நடத்... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவைக்கு ரூ. 669 கோடியில் புதிய கட்டடம்: பேரவைத் தலைவா் தகவல்

புதுவை சட்டப்பேரவைக்கு ரூ.669 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் ஆா் .செல்வம் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியா... மேலும் பார்க்க

செப். 11-இல் 10 இடங்களில் சுனாமி ஒத்திகை: புதுச்சேரி ஆட்சியா்

புதுச்சேரியில் 10 இடங்களில் செப். 11-ஆம் தேதி சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். புதுவை அரசு மாவட்ட நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் சாா்பாக ... மேலும் பார்க்க

உலகை சீரழிவிலிருந்து மீட்கும் ஒரே வழி தமிழ்க் கலாசாரம்தான்: மோரீஷஸ் டி.எம். பொன்னம்பலம்

உலகத்தைச் சீரழிவிலிருந்து மீட்கும் ஒரே வழி வளமான தமிழ்க் கலாசாரம்தான். இப்போது மனித உரிமை மீறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது என்று மோரீஷஸ் நாட்டின் அரசு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி குறைப்பு: புதுவை முதல்வா் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்றுள்ளாா். புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் ஆசிரியா் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் முதல்வா் ரங... மேலும் பார்க்க