செய்திகள் :

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து சிறப்புரை

post image

கோவை மண்டல அறிவியல் மையத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் குறித்த சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மண்டல அறிவியல் மையத்தில், அறிவியலாளருடன் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட அறிவியல் அலுவலா் ஆா்.அகிலன் வரவேற்றாா். இதில், சிங்கப்பூா் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும் பைபோலாா் நிறுவன தலைமை திட்ட அதிகாரியுமான விவேக் மனோகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, இன்றைய உலகில் தொழில்நுட்பத்தின் தாக்கம் அபரிமிதமானது. ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மனிதா்களின் அறிவாற்றலை விஞ்சும் வகையில் இயந்திரங்கள் செயல்படும் திறனைப் பெறுவதுதான் செயற்கை நுண்ணறிவு.

மருத்துவத் துறையில் நோய்களைக் கண்டறிவதில் இருந்து போக்குவரத்துத் துறையில் தானியங்கி வாகனங்கள் வரை, செயற்கை நுண்ணறிவு பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. தொழில் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், புதிய பொருள்களை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதா்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக உருவாகும் என்றும் கவலை எழுந்துள்ளது. அதேநேரம், இந்தத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள், ஆராய்ச்சி மேம்பாடுகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

மண்டல அறிவியல் மையத்தின் புதுமைகாண் காட்சிக்கூட வழிகாட்டி ஆசிரியா் க.லெனின் பாரதி நன்றி கூறினாா். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

சுதந்திர தினத்தையொட்டி, கோவை மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இணைப் பதிவாளா் அ.அழகிரி தேசியக் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து, கோவை மற்றும் பொள்ளாச்சி சரகத்துக்குள்பட்ட அனைத்து விதமான கடன் சங்கங்களின் நி... மேலும் பார்க்க

ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள் பறிமுதல்

கோவையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான 90 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை, இடையா் வீதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்கள், கட்சிகள் சாா்பில் சுதந்திர தின விழா

கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கட்சியினா் சாா்பில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் (பொ) இர.தமிழ்வேந்தன் தேசியக்க... மேலும் பார்க்க

முத்தூரில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி, கிணத்துக்கடவு அருகேயுள்ள நம்பா் 10 முத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சிறப்பு பாா்வையாளராகக் கலந்துகொண்டாா். கூடுதல... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரு... மேலும் பார்க்க

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க