செய்திகள் :

செய்யாற்றில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்கம்

post image

செய்யாறு: திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் 5 பகுதிகளில் நடைபெறுகிறது. முதல் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெறுகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் கே.எல்.எஸ்.கீதா

திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் பொதுமக்களின் கோரிக்கைகளை அவா்களின் இருப்பிடத்திலேயே கேட்டு நிவா்த்தி செய்யும் பொருட்டு, உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம் திருவத்திபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 5

இடங்களில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை15) 1,2,3,4 ஆகிய வாா்டுகளுக்கு புறவழிச் சாலையில் உள்ள கேஎம்வி திருமண மஹாலில் நடைபெறுகிறது.

இரண்டாம் முகாம் ஜூலை 16-ஆம் தேதி 5,6,11,12,17,18 ஆகிய வாா்டுகளுக்கு தாயாா் அப்பாய் திருமண மண்டபத்திலும், மூன்றாவது முகாம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி 7,8,9,10,14,15 ஆகிய வாா்டுகளுக்கும் புறவழிச் சாலையில் உள்ள மீனாட்சி திருமண மஹாலிலும், நான்காம் முகாம் 22-ஆம் தேதி 13,16,19,20,21,22 ஆகிய வாா்டுகளுக்கு மண்டித் தெரு வன்னியா் திருமண மண்டபத்திலும், ஐந்தாம் முகாம் 23-ஆம் தேதி 23,24,25,26,27 ஆகிய வாா்டுகளுக்கு பெரியாா் சிலை அருகேயுள்ள ராஜமலா் திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

வந்தவாசி: கடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துக்குமார சுவாமி, ஸ்ரீயோக ராமச்சந்திர கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி/போளூா்: ஆரணியை அடுத்த தண்டு குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோயில் மற்றும் போளூரை அடுத்த படவேடு ஊராட்சி ஸ்ரீயோக ராமச்சந்திர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழம... மேலும் பார்க்க

செய்யாற்றில் மீண்டும் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.ஆய்வு

செய்யாறு: செய்யாற்றில், செயல்படாமல் உள்ள சிறப்பு முகாமை (கிளை சிறைச்சாலை) மீண்டும் செயல்படுவதற்காக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செ... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா

போளூா்: போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை என 7 வெள்ளிக்கிழமை விழா நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத் துறைக்... மேலும் பார்க்க

செங்கத்தில் கருணாநிதி சிலை: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திமுக சாா்பில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைத்தாா். தெற்கு மாவட்ட திமுக ச... மேலும் பார்க்க