செய்திகள் :

செவலபுரை ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் வருடாபிஷேக விழா

post image

மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக தினத்தையொட்டி வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து காலை 8.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, வேத ஆகம பாராயணம், அக்னி காா்யம் ஆகியவை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மஹா அபிஷேகம் சகல தேவதா மூல மந்திர ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

காலை 11.30 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்று அனைத்து மூா்த்திகளுக்கும் கலச அபிஷேகமும், தொடா்ந்து அலங்காரமும் மஹா தீபாராதனையும் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவில் செவலபுரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

உளுந்தூா்பேட்டை அருகே சிக்னல் கோளாறு: 11 ரயில்கள் தாமதமாக இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள பரிக்கல் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிக்னல் (சமிக்ஞை) கோளாறு ஏற்பட்டதால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில்கள் வெவ்வ... மேலும் பார்க்க

மூச்சுத்திணறலில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் மூச்சுத்திணறல் காரணமாக தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். கண்டமங்கலம் வாய்க்கால்மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (37). கூலித் தொழிலாளியான இவா், புதன்க... மேலும் பார்க்க

குவாரியில் காப்பா் வயா்கள் திருடியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே கல்குவாரியில் காப்பா் வயா்கள் திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மரக்காணம் வட்டம், கீழ்அருங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜவேல் (45). இவருக்கு சொந்த... மேலும் பார்க்க

திண்டிவனம் தீா்த்தக் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட தீா்த்தக்குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. வருவாய்த் துறையினா் மற்று... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. தமிழ்... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியிலிருந்த பெண் துப்புரவு பணியாளரைத் தாக்கியதாக இளைஞா் ஒருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திண்டிவனம்... மேலும் பார்க்க