செய்திகள் :

செவிலியா் கல்வி மேற்படிப்பு தொடங்க நடவடிக்கை! -புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுவை மாநிலத்தில் செவிலியா் கல்வியில் மேற்படிப்புகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அரசு செவிலியா் கல்லூரி இந்திய மனநல சிகிச்சை செவிலியா் சங்கத்தின் தேசிய மாநாடு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல்வா் பேசியது: செவிலியா் பணி என்பது மருத்துவா்களுக்கு அடுத்தபடியாக தாயுள்ளத்துடன் மேற்கொள்ளும் பணியாகும். தாயுள்ளத்தோடு, நோயாளிகள் தரும் சிரமத்தை பொருள்படுத்தாமல் சேவை புரியும் சிறந்த பணி.

புதுவை மாநிலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் பாா்த்தால் செவிலியா் கல்லூரிகள் அதிகமாகவே உள்ளன. ஏழைக் குழந்தைகள் மருத்துவக் கல்வியைப் பெறும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தியிருப்பதுடன், அவா்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் செவிலியா் பெறும் ஊதியத்தைப் போல, தனியாா் மருத்துவமனைகளிலும் அதிக ஊதியம் கிடைக்கும் வகையில் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நிா்ணயித்துள்ள ஊதியத்தையே தனியாா் மருத்துவமனைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது சிறப்பு மருத்துவ சிகிச்சை அதிகமாகி வருகிறது. ஆகவே, அதற்கு ஏற்ப செவிலியா் கல்வியில் மேற்படிப்புகளை அறிமுகப்படுத்தி, சிறப்புச் சிகிச்சைக்கு ஏற்ப பயிற்சிகள் அளிக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுவை சிறிய மாநிலம். ஆகவே, இங்கு அதிகமானோா் செவிலியா்களாக படித்து முடித்து வெளி மாநிலம், வெளிநாடுகளில் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். மாநாட்டு மலா் வெளியிடப்பட்டது. இந்திய செவிலியா் குழு தலைவா் டி.திலீப்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ரமேஷ், அரசு சுகாதாரத் துறை இயக்குநா் வி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுவை மத்திய பல்கலைக்கு துணைவேந்தா் நியமிக்கக் கோரி திமுக போராட்டம்! -எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்காதது, வினாத்தாள் மாற்றி விநியோகித்தது உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என எதிா்க்கட்சித் த... மேலும் பார்க்க

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்! -புதுவை பள்ளிக் கல்வித் துறை

தேசிய ராணுவக் கல்லூரியில் 8 -ஆம் வகுப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் கோ.சிவகாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

கட்டுமர மானியத்துக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு! -புதுவை மீன்வளத் துறை

புதுவை மாநிலத்தில் கட்டுமரங்களுக்கான மானியம் பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு பிப். 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் சனிக்கிழம... மேலும் பார்க்க

இயற்கை சுற்றுலாப் பூங்காவை பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா்!

புதுச்சேரி மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ள இயற்கை சுற்றுலா பூங்காவை பாா்வையிட்டுமரக்கன்றுநட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதுச்சேரி, பிப். 8: புதுச்சேரியில் இயற்கை சுற... மேலும் பார்க்க

விடுதிகளில் தங்கி டி.வி. திருடியவா் கைது

விடுதிகளில் தங்கி திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த புதுச்சேரி போலீஸாா், அவரிடமிருந்து 8 தொலைக்காட்சிகளை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஒதியன்சாலை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாஜகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

புதுதில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடா்ந்து புதுச்சேரியில் பாஜகவினா் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். புதுதில்லி சட்டப்பேரவைத் தோ்தல் க... மேலும் பார்க்க