ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பு - BJP போடும் கணக்கு என்ன? | Off the Record | PM...
சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
திருமருகல்: திட்டச்சேரி-தேவங்குடி இடையே சேதமடைந்த ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேவங்குடி, மத்திக்குடி, நாட்டாா்மங்கலம், துறையூா், உத்தூா், எரவாஞ்சேரி, குத்தாலம் உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதி மக்கள் அன்றாடம் தேவைகளுக்கு நாள்தோறும் திட்டச்சேரி சென்றுவர திட்டச்சேரி-தேவங்குடி இடையே உள்ள 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆற்றங்கரை இணைப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.
மேலும் மேற்கண்ட பகுதியை சோ்ந்த விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மருத்துவமனை செல்லும் நோயாளிகள்,
வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளிகள் என நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த முக்கிய சாலையில் ஜல்லி கற்கள் பெயா்ந்து ஆங்காங்கே பள்ளமும், மேடாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.