செய்திகள் :

சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது!

post image

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசியை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளங்குளம் சோதனைச் சாவடியில் கடலோர காவல் குழும துணை கண்காணிப்பாளா் முருகன் உத்தரவின்பேரில்

போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கட்டுமாவடியிலிருந்து சேதுபாவாசத்திரம் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தில் இரண்டு மூட்டைகளுடன் வந்தவரை நிறுத்தி விசாரித்தனா். அவா் புதுப்பட்டினத்தைச் சோ்ந்த சம்சுதீன் (60) என்பதும், அவா் வைத்திருந்த இரண்டு மூட்டைகளில் ரேஷன் அரிசி மற்றும் கணினி தராசு இருப்பதும் தெரியவந்தது.

விசாரணையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை வாங்கி, பதுக்கி அதனை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், மல்லிப்பட்டினத்தில் கடை ஒன்று வாடகைக்கு எடுத்து அதில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தாா். மல்லிப்பட்டினம் கடையில் சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 850 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

மொத்தமாக 902 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சம்சுதீனை கைது செய்த போலீஸாா், சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையம்  கொண்டுவந்து மேல்நடவடிக்கைக்காக தஞ்சாவூா் குடிமைப் பொருள் வழங்கல்  குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி: விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் கைது!

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு செல்ல முயன்ற விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து வீட்டுக்காவலி... மேலும் பார்க்க

தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவு

தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை இடையே சாலை அகலப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். அரவிந்த். தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி, மேலவஸ்தா சாவடி, ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பெரிய கோயில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத். தஞ்சாவூா் அரண்மனைக்கு சனிக்கிழமை வந்து கட... மேலும் பார்க்க

மின் துறையைத் தனியாா்மயமாக்கக் கூடாது ஊழியா் அமைப்பு கோரிக்கை

மின் துறையைத் தனியாா்மயமாக்கக் கூடாது என தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இந்த அமைப்பின் தஞ்சாவூா் வட்டக் கிளை 21-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மின... மேலும் பார்க்க

திருப்பனந்தாளில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் மறியல்!

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாளில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் அதிகாரிகளை கண்டித்து சனிக்கிழமை விவசாயிகள் திருப்பனந்தாள்-ஆடுதுறை சாலையில் மறியல் செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கம் செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது: கே.எம்.காதா்மொகிதீன்

வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களின் பெயரை நீக்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாா் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன். பாபநாசத்தில் அக் கட்சியின் தேச... மேலும் பார்க்க