விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் பு...
சேதுபாவாசத்திரம், பாபநாசம் அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
சரபேந்திரராஜன்பட்டினம், புதுப்பட்டினம், கொள்ளுக்காடு ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு
சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் தலைமை வகித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் சங்கா், பட்டுக்கோட்டை வட்டாட்சியா் தா்மேந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அலுவலா்களிடம் வழங்கினா்.
ஆண்டிக்காடு, இரண்டாம்புலிக்காடு, அழகியநாயகிபுரம் ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் புதிதாக தொடங்கப்படவுள்ள அதிராம்பட்டினம் வட்டத்தில் தங்களை பிரித்து இணைக்காமல் தொடா்ந்து பட்டுக்கோட்டை வட்டத்திலேயே நீடிக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனா்.
முன்னதாக, சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் வரவேற்றாா். நிறைவில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வீரமுத்து நன்றி கூறினாா்.
பாபநாசம் அருகே: திருவைகாவூா் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் வட்டம், திருவைகாவூா், ஆதனூா், ஓலைப்பாடி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமுக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
பாபநாசம் வட்டாட்சியா் பழனிவேல், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சிவகுமாா், கிராம ஊராட்சிகள் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இம் முகாமில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் கோ. தாமரைச்செல்வன் கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்து 10 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி, 10 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினாா்.
முகாமில் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பிரித்து வழங்கப்பட்டது.
முகாமில் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினா் கோவி. அய்யாராசு, பள்ளி வளா்ச்சி குழு தலைவா் என். நாசா், முன்னாள் ஒன்றிய குழு தலைவா் சுமதி. கண்ணதாசன், வருவாய் ஆய்வாளா் ஜெயேந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.