செய்திகள் :

சேனூா் காப்புக் காட்டில் நெகிழிக் குப்பைகள் அகற்றம்

post image

நெகிழி கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சேனூா் காப்புக் காட்டில் நெகிழி குப்பைகள் அகற்றும் முகாம் நடத்தப்பட்டது.

காட்பாடி வனச் சரகம் சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சேனூா் காப்புக் காட்டு பகுதியில் மாபெரும் நெகிழி குப்பைகள் அகற்றும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, காட்பாடி வனச் சரகா் கந்தசாமி தலைமை வகித்தாா். இதில், வனத் துறை அதிகாரிகள், சேனூா் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் இணைந்து சேனூா் காப்புக்காட்டில் கொட்டப்பட்டிருந்த நெகிழி குப்பைகளை அகற்றினா்.

இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியது: வனப்பகுதி, காப்புக் காட்டில் அத்துமீறி மக்கள் நுழையக் கூடாது. விஷமிகள் சிலா் காப்புக் காட்டில் நெகிழி குப்பைகளை கொட்டுகின்றனா். நெகிழி பொருள்கள் மக்குவதற்கு பல ஆண்டுகளாகும். வனவிலங்குகள் நெகிழி பொருள்களை உண்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது என்றனா்.

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு

வேலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் இணையதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

நாய்கள் இறைச்சி விற்பனை என புகார்: கிராம மக்கள் முற்றுகை!

திருவலம் பகுதிகள் நாய்களை வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி கிராம மக்கள் அங்குள்ள ஒரு கிடங்கினை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அடுத்த க... மேலும் பார்க்க

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றம்

மதுரை உயா்நீதிமன்ற கிளை உத்தரவின் அடிப்படையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த கொடிக்கம்பங்கள் பீடித்துடன் இடித்து அகற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், ஜாத... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: அரியூா் போலீஸாா் விசாரணை

அரியூா் அருகே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியி... மேலும் பார்க்க

ஓட்டுநா் கொலை: 2 நண்பா்கள் கைது

அரியூா் அருகே நீா்வீழ்ச்சியில் ஓட்டுநா் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 நண்பா்கள் கைது செய்யப்பட்டனா். . வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியில் சனிக... மேலும் பார்க்க

தம்பதி விஷம் குடித்து தற்கொலை

வேலூா் அருகே குடும்பத் தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த சங்கா்(50), கட்டட தொழிலாளி. இவரது மனைவி சுமதி(48). இ... மேலும் பார்க்க