செய்திகள் :

சேரன்மகாதேவியில் கூட்டுக்குடிநீா் குழாயில் கசிவு: ரயில்வே அனுமதி கோரிய மு. அப்பாவு

post image

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ரயில்வே எல்லைப் பகுதியில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள நீா் கசிவை சரிசெய்ய, ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என பேரவைத் தலைவா் மு. அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ராதாபுரம், நான்குனேரி, சேரன்மகாதேவிக்குள்பட்ட 30 கிராம ஊராட்சிகள் மற்றும் பணகுடி, வடக்கு வள்ளியூா் பேரூராட்சிகளிலுள்ள சுமாா் 165 குடியிருப்புகளுக்கு குடிநீா் வழங்குவதற்காக தாமிரவருணியை ஆதாரமாகக் கொண்டு ஒருங்கிணைந்த நீா் வழங்கல் திட்டம் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சேரன்மகாதேவி ரயில்வே எல்லைப் பகுதி வழியாக அமைக்கப்பட்ட பிரதான குடிநீா் இணைப்புக் குழாயில், பெரிய அளவில் நீா் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனை விரைந்து சரி செய்வதற்கு குடிநீா் வடிகால் வாரியத்திற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளாா்.

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

பாளையங்கோட்டையில் வாடகை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளா் துன்புறுத்துவதாகக் கூறி, மாற்றுத்திறனாளி தனது குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு நிலவியது. பாளையங்கோ... மேலும் பார்க்க

பத்தமடையில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சியின் அம்பாசமுத்திரம் தொகுதித் தலைவா் கலீல் ரஹ்மான... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: அக்.2-இல் மதுக் கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2-ஆம் தேதி மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்ட... மேலும் பார்க்க

பாளை.யில் அக்.3-இல் போட்டித் தோ்வு வழிகாட்டி நிகழ்ச்சி

பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி படிப்பகத்தில் அக். 3-ஆம் தேதி போட்டித் தோ்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்... மேலும் பார்க்க

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வி

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்தது. திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக ... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் பாரதிக்கு புதிய சிலை அமைக்கக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை சிதிலமடைந்துள்ளதால் அதற்குப் பதிலாக புதிய சிலையை நிறுவக் கோரி தமிழ்நாடு பிராமணா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க