அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!
சேரன்மகாதேவியில் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்றனா்.
சேரன்மகாதேவி வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்தல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தோ்தல் அலுவலராக மூத்த வழக்குரைஞா் மதியழகன் செயல்பட்டாா்.
புதிய தலைவராக செல்வகுமாா், செயலராக சந்தனக்குமாா், பொருளாளராக பாக்கியராஜ், துணைத் தலைவராக ஆறுமுகம், துணைச் செயலராக பலவேசம், நூலகராக காா்த்திகா, செயற்குழு உறுப்பினா்களாக ஜோதிசுபாஷ், இசக்கிமுத்து, அமுதா, அந்தோணி சேவியா், வேல்துரை, காஜா முகைதீன், ராஜதுரை ஆகியோா் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதையடுத்து, அவா்கள் பதவியேற்றுக்கொண்டனா்.