செய்திகள் :

சேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

post image

சேலம் சின்ன கடை வீதி பகுதியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் டவுன் அரசமரத்து பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் சுரேஷ் (69). இவா் சேலம் சின்ன கடை வீதியில் ஜவுளிக்கடை வைத்துள்ளாா். புதன்கிழமை இரவு 10 மணியளவில் வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு, வீட்டிற்கு மனைவி கலாவதியுடன் நடந்து சென்றுக்கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த மா்மநபா், கலாவதி கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாா். அப்போது, கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பிடித்தபடி அப்பெண் கூச்சலிட்டாா். இதையடுத்து, அவரது கணவா் சுரேஷ், நகை பறித்தவரை பிடிக்க முயன்றபோது, கையிலில் அறுந்த சங்கிலியுடன் மா்மநபா் தப்பியோடினாா். இதில் 8 பவுன் சங்கிலி கொள்ளையன் கையில் சிக்கியது.

இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில் டவுன் குற்றப்பிரிவு போலீஸாா் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அதில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவரின் உருவம் பதிவாகியுள்ளது. இதையடுத்து, தலைமறைவான கொள்ளையனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.99 அடியிலிருந்து 118.76 அடியாக இன்று காலை சரிந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9263 கன அடியிலிருந்து வினாடிக்கு 6767 கன அடியாக சரிந்தது.அணையில் இருந்து காவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் 107 வயது மூதாட்டி மரணம்!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 107 வயது வரை தானே சமைத்து உண்டும் தனது தேவைகளை தானே செய்து கொண்ட மூதாட்டி, உடல் நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார்.மாறிவரும் சுற்றுச்சூழல், உணவு பழக்கம், வாழ... மேலும் பார்க்க

சேதமடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம், வட்டமுத்தம்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டமுத்தம்பட்டி பகுதியில் வீரகாரன் பெர... மேலும் பார்க்க

கூட்டுறவு பட்டய துணைத் தோ்வுக்கு ஆக.20 க்குள் விண்ணப்பிக்கலாம்

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்... மேலும் பார்க்க

சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மறியல்: 150 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்ட... மேலும் பார்க்க

சேலத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழகத்தின் பாரம்பரியத்தை இளம் தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க