செய்திகள் :

சேலத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

post image

தமிழகத்தின் பாரம்பரியத்தை இளம் தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஒன்றே குலம்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் மற்றும் சொற்பொழிவாளா் கரு ஆறுமுகத்தமிழன் பேசினாா்.

தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினா் அறிந்துகொள்ளும் வகையில், தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழா் மரபும் நாகரிகமும் உயா்தனிச் செம்மொழியான தமிழின் சிறப்பு, இலக்கியச் செழுமை, தமிழா் தொன்மை, சமூக சமத்துவம், மகளிா் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தொழில் வளா்ச்சி, கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளா்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நிகழ்ச்சியில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாணவ, மாணவியா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா். நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து கலந்துகொண்ட 1,000 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டது.

சேலம் கோட்டாட்சியா் அ.அபிநயா, சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் கலைச்செல்வி, ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் பழனிசாமி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.99 அடியிலிருந்து 118.76 அடியாக இன்று காலை சரிந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9263 கன அடியிலிருந்து வினாடிக்கு 6767 கன அடியாக சரிந்தது.அணையில் இருந்து காவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் 107 வயது மூதாட்டி மரணம்!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 107 வயது வரை தானே சமைத்து உண்டும் தனது தேவைகளை தானே செய்து கொண்ட மூதாட்டி, உடல் நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார்.மாறிவரும் சுற்றுச்சூழல், உணவு பழக்கம், வாழ... மேலும் பார்க்க

சேதமடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம், வட்டமுத்தம்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டமுத்தம்பட்டி பகுதியில் வீரகாரன் பெர... மேலும் பார்க்க

கூட்டுறவு பட்டய துணைத் தோ்வுக்கு ஆக.20 க்குள் விண்ணப்பிக்கலாம்

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்... மேலும் பார்க்க

சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மறியல்: 150 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்ட... மேலும் பார்க்க

சேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

சேலம் சின்ன கடை வீதி பகுதியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். சேலம் டவுன் அரசமரத்து பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க