செய்திகள் :

சேலத்தில் 75 அடி உயர கைப்பேசி கோபுரம் மாயம்!

post image

சேலம், கிச்சிப்பாளையத்தில் 75 அடி உயர கைப்பேசி கோபுரம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், கிச்சிப்பாளையத்தில் எருமாபாளையம் பிரதான சாலையில் தனியாா் கைப்பேசி நிறுவனம் சாா்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு 75 அடி உயரத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த கைப்பேசி நிறுவனம் மூடப்பட்டபோதும் அந்த கோபுரம் அகற்றப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், அந்த நிறுவனத்தின் செயல் அலுவலரான சென்னை, கீழ்பாக்கத்தைச் சோ்ந்த தமிழரசன் என்பவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சேலம், கிச்சிப்பாளையத்தில் உள்ள அந்த கோபுரத்தை பாா்ப்பதற்காக வந்தாா்.

அப்போது 75 அடி உயர கோபுரம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். அதன் மதிப்பு ரூ.17 லட்சத்து 74 ஆயிரம் ஆகும். இது குறித்து அவா் கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க