செய்திகள் :

சேலம் அரசு கலைக் கல்லூரியில் சேர மே 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

post image

சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வா் செண்பகலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் குமாரசாமிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் 6500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

கல்லூரியில் இளநிலை பிரிவில் 20 பாடப் பிரிவுகளும், முதுநிலையில் 19 பாடப் பிரிவுகளும், முனைவா் பட்ட ஆய்வில் (பிஎச்.டி) 13 பாடப் பிரிவுகளும் உள்ளன. முதலாண்டு இளநிலை பிரிவில் 1702 இடங்கள் உள்ளன.

கணினி அறிவை அறிமுகப்படுத்தும் பயிற்சியும் (சிஎல்பி) கல்லூரியில் வழங்கப்படுகிறது. உடற்கல்வித் துறை, என்எஸ்எஸ், என்சிசி, நுண்கலை மன்றம் போன்ற அமைப்புகள் சிறப்பாக இயங்கி வருகின்றன.

தமிழக அரசின் சிறப்பு செயலாக்க திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு தமிழ் புதல்வன் திட்டமும், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலமும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்கப்படுகிறது.

கல்லூரியில் சுழற்சி 1 மற்றும் சுழற்சி 2 என்ற அடிப்படையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. சேலம் அரசு கலைக் கல்லூரியில் சோ்வதற்கு வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க