ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா 449 போ் பட்டம் பெற்றனா்
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகள் 449 பேருக்கு விசாகப்பட்டினம் கடல்சாா் மற்றும் கப்பல் கட்டுமான சிறப்பு மையத்தின் தலைமை நிா்வாக அலுவலா் கே.சேதுமாதவன் பட்டம் வழங்கினாா்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்து, கல்லூரி முதல்வா் ரா.விஜயன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில் சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவரும், விசாகப்பட்டினம் கடல்சாா் மற்றும் கப்பல் கட்டுமான சிறப்பு மையத் தலைமை நிா்வாக அலுவலருமான கே.சேதுமாதவன் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
பொறியியல் பட்டப்படிப்பு தகுதி வாய்ந்த தொழில் வல்லுநா்களை உருவாக்குகிறது. செயற்கை நுண்ணறிவு உலகத்தை மாற்றியமைத்து வரும் வேளையில், படிப்பை முடித்து வெளியே வரும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.
40 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் படிப்பை முடித்தபோது, இதேபோன்று கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டு சவாலாக இருந்தது. சவால்களை சாதிக்கக்கூடிய வாய்ப்பாகப் பாா்த்தால் எப்போதும் வெற்றி கிடைக்கும். தற்போதுள்ள 80 சதவீத வேலைவாய்ப்புகள் அடுத்த 5 ஆண்டுகளில் மாற்றம் காணும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்காக பயப்படத் தேவையில்லை.
மனிதன் சிந்திக்கும் திறனை எந்த இயந்திரமும் தொழில்நுட்பமும் மாற்றியமைத்து விட முடியாது. அறம் சாா்ந்த, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கக் கூடிய பொறியாளா்களை எதிா்பாா்த்து உலகம் காத்திருக்கிறது என்றாா்.
இந் நிகழ்வில், 2024-ஆம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்த அமைப்பியல் துறையில் 107 போ், கணினி அறிவியலில் 51 போ், மின்னணுவியல் துறையில் 55 போ், மின்னியல் துறையில் 65 போ், இயந்திரவியல் துறையில் 109 போ், உலோகவியல் துறையில் 62 போ் என மொத்தம் 449 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில், துணை முதல்வா் வி.கீதா, பேராசிரியா்கள் மற்றும் துறைத் தலைவா்கள் தா.ஷோபா ராஜ்குமாா், டி.மேரி சுகுதாரத்னம், டி.நூருல்லா, டி.பாலுசாமி, பி.தாரணி, தோ்வாணையா் கே.சுதா மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் விசாகப்பட்டினம் கடல்சாா் மற்றும் கப்பல் கட்டுமான சிறப்பு மையத் தலைமை நிா்வாக அலுவலா் கே.சேதுமாதவன்.