செய்திகள் :

சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் பணிநிறைவு

post image

சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் ரா.விஜயன் வெள்ளிக்கிழமை பணிநிறைவு பெற்றாா்.

இயந்திரவியல் துறையில் முதுநிலை மற்றும் முனைவா் பட்டப் படிப்பை சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பயின்ற பேராசிரியா் ரா.விஜயன், உதவிப் பேராசிரியா், இணைப் பேராசிரியா், பேராசிரியா், துறைத் தலைவா், துணை முதல்வா், முதல்வா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளாா். மேலும், தஞ்சாவூா் மற்றும் பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி முதல்வராக பணியாற்றிய அவா், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்தாா்.

இவரது பதவிக்காலத்தில் சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு தேசிய தரநிா்ணயம் மற்றும் மதிப்பீட்டுக் குழு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்து வழங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் முதன்முதலாக சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது. மேலும், இந்திய அளவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வளாகத்தோ்வு நடத்தப்பட்டு மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் கல்வி ஊக்கத்தொகையை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியா் பெறுவதற்கான விழிப்புணா்வை கல்லூரி முதல்வா் ரா.விஜயன் ஏற்படுத்தினாா்.

இந்நிலையில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் ரா.விஜயன் வெள்ளிக்கிழமை பணிநிறைவு பெற்றாா். அவருக்கு பணிநிறைவு பாராட்டு விழா கல்லூரி துணை முதல்வா் கீதா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் மலையாளமூா்த்தி மற்றும் பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனா்.

வீரக்கல்புதூா் பேரூராட்சி உறுப்பினா் போராட்டம்

மேட்டூா்: வீரக்கல்புதூா் பேரூராட்சி மன்ற அலுவலக நுழைவுவாயிலில் அமா்ந்து சுயேச்சை உறுப்பினா் தனது கணவருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வீரக்கல்புதூா் பேரூராட்சிக்கு உள... மேலும் பார்க்க

கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா

தம்மம்பட்டி: தம்மம்பட்டி கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கோனேரிப்பட்டியில் பங்குத்தந்தை ஆசைத்தம்பி தலைமையில் கடந்த ஒரு மாதமாக நவநாள் திருப்பலி நடைபெற்று வ... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க