செய்திகள் :

சேலம் சுகவனேசுவரா் கோயிலில் ரூ. 3.60 கோடியில் திருமண மண்டபம் திறப்பு

post image

சேலம் அருள்மிகு சுகவனேசுவரா் சுவாமி திருக்கோயில் வளாகத்தில் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு சட்டப் பேரவை அறிவிப்பின்படி, சுகவனேசுவரா் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுப்பராயன் சாலையில் 11,500 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் முதல்தளத்துடன் கூடிய திருமண மண்டபம் ரூ. 3.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2023 ஏப்ரல் 6-ஆம் தேதி முதல்வா் அடிக்கல் நாட்டி இதற்கான பணிகளை தொடங்கிவைத்தாா். பணிகள் முடிவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திருமண மண்டபம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

இந்து சமய அறநிலையத் துறை வாயிலாக கோயில்களின் வளா்ச்சிக்காக அனைத்து சாதியினரும் அா்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டம், பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, கோயில்களுக்கு குடமுழுக்கு, குளங்களை புனரமைத்தல், கோயில்களில் திருப்பணிகள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், துணை மேயா் மா. சாரதாதேவி, அறங்காவலா்கள் குழுத் தலைவா் வள்ளியப்பா, சேலம் கோட்டாட்சியா் அ.அபிநயா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் வே. சபா்மதி, உதவி ஆணையா் வி. அம்சா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரம்

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரத்தில், தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி எல்லைக்குள்பட்ட கவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ந... மேலும் பார்க்க

நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில் 5 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில், நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேலம், ஆட்டையாம்பட்டி, ராசிபுரம் பிரதான சாலையில் ரவிச்சந்திரன் (54) என்பவா் ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி நீா்மின் தேக்க கதவணை காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது. நீா்மின் திட்டத்துக்காக கோனேரிப்பட்டி காவிரி ஆற்றில்... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நிகழ்ந்ததா என போலீஸாா் விடிய விடிய சோதனை நடத்தினா். ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ஈரோட்... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி பூஜை

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாக கொண்டு வந்த பால், த... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறைஅஷ்டமியையொட்டி சங்ககிரி வட்டம், அரசிராமணி அருள்மிகு சோழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், காலபைவரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், ... மேலும் பார்க்க