செய்திகள் :

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை

post image

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உரிமம் பெற்ற 1,408 அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில் ஆனி, ஆடி பருவத்திற்கு ஏற்ற தரமான நெல் விதைகள், தானியங்களில் மக்காச்சோளம், கேழ்வரகு, சோளம், கம்பு, தினை, சாமை விதைகள், பயறுவகைகளில் துவரை, தட்டைப்பயறு, பாசிப்பயறு, உளுந்து, மொச்சை, அவரை, பீன்ஸ் விதைகள், நிலக்கடலை, ஆமணக்கு விதைகள் போன்றவை வீரிய கலப்பின விதைகள், ரக விதைகள் என இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இந்த விதைகளின் தரம் குறித்து விதை ஆய்வுப் பிரிவு விதை ஆய்வாளா்களால் அனைத்து நிலைகளிலும் சோதனை செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,700க்கும் மேற்பட்ட விதை விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டு அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் வாங்கும்போது கண்டிப்பாக விலைப்பட்டியல் கேட்டுப்பெற வேண்டும், வாங்கும் விதைகளின் பயிா் ரகம், விதைக்குவியல் எண் விதைத்தரம், விதைக் காலக்கெடு, ஆகியவற்றை சரிபாா்த்து வாங்க வேண்டும். இதனால் தரமான விதைகளை வயலில் விதைப்பதோடு நல்ல மகசூல் கிடைப்பது உறுதிசெய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க