செய்திகள் :

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 28 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய நபா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழ்நாடு, கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் இணைந்து, தனிப்படைகளை அமைத்து ரயில்களில் சோதனையிட்டு வருகின்றனா்.

அந்த வகையில், சேலம் உட்கோட்டத்தில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா், சனிக்கிழமை இரவு திப்ரூகா்-கன்னியாகுமரி விரைவு ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஜோலாா்பேட்டையில் இருந்து வந்த அந்த ரயிலில் ஏறிய தனிப்படை போலீஸாா், சேலம் வரை ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனையிட்டனா். இதில், முன்பக்கத்தில் உள்ள முன்பதிவில்லா பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று ஒரு சாக்குமூட்டை கிடந்தது.

அதனை போலீஸாா் திறந்துபாா்த்தபோது, 14 பிளாஸ்டிக் பண்டல்களில் 28 கிலோ கஞ்சா இருந்தது. அதைக் கடத்திய நபா்கள், கழிவறை அருகே போட்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 28 கிலோ கஞ்சாவையும் சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் தனிப்படையினா் ஒப்படைத்தனா். தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்து, கஞ்சாவைக் கடத்திவந்த மா்மநபா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

சேலம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

மேட்டூா் அருகே திருமணமான 15 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். எடப்பாடி, புதுபாளையத்தைச் சோ்த்த ஐயம்பெருமாள் மகள் சங்கீதாவுக்கும் (24)... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தும்பல்

தும்பல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாழப்பாடி கோட்ட மின் செயற்பொறியாளா் குணவா்த்தினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை வெள்ளத்தில் சிக்கிய முதியவா் மீட்பு

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரில் சிக்கிய முதியவரை அப்பகுதி இளைஞா்கள் மீட்டனா். மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது சிலமணி நேரத்துக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்க... மேலும் பார்க்க

பூலாம்பட்டியில் இளம்பெண் தற்கொலை

பூலாம்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி, குப்பனூா் வாய்க்கால்கரை பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவரது மனைவி பாப்பாத்தி (26). இத்தம்பதிக்கு ஹாசி... மேலும் பார்க்க

மக்களை ஈா்க்கும் மானாத்தாள் ஏரி!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கக் குவிந்த மக்கள்கூட்டம். மேட்டூா் அணையின் உபரிநீா் நிரப்பும் திட்டத்தின் கீழ், மானத்தாள் ஏரி தற்போது நிரம்பிவழிகிறது. இதையடு... மேலும் பார்க்க