செய்திகள் :

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

post image

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 - 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் மனைவி சாந்தகுமாரி மீதும் 2001-ல் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017-ல் துரைமுருகன், அவரின் மனைவி ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.

இருப்பினும், இருவரின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததோடு, வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ-வுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி, வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் விசாரணையின்போது துரைமுருகன் மற்றும் அவரின் மனைவி நேரில் ஆஜராகாததால், இருவருக்கெதிராகவும் பிடிவாரன்ட் பிறப்பித்தது.

இந்த நிலையில், நீதிபதி இ.பக்தவச்சலு முன்னிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

அப்போது, நேரில் ஆஜரான துரைமுருகனின் மனைவி தனக்கெதிராக பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லை.

பின்னர், சாந்தகுமாரியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவருக்கெதிரான பிடிவாரன்ட்டை மட்டும் திரும்பப் பெற்று வழக்கை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஒத்திவைத்தார்.

மேலும், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லையென்றால் அவருக்கெதிரான பிடிவாரன்ட்டை அமல்படுத்துமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

``டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன்'' -நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் த... மேலும் பார்க்க

"செங்கோட்டையன் பக்கம் அதிமுக-வினர் கூடுவார்கள்; பழனிசாமி ஓரம்கட்டப்படுவார்" - புகழேந்தி காட்டம்!

செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட... மேலும் பார்க்க

`அண்ணாமலை இருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது..!' - டிடிவி தினகரன்

செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட... மேலும் பார்க்க

TVK : 'விஜய்யின் சுற்றுப்பயணத்தை காவல்துறை தடுக்க நினைக்கிறது!' - ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு

தவெக தலைவர் விஜய் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்யும் முடிவில் இருக்கிறார். திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு காவல்துறைய... மேலும் பார்க்க

"யானை, டிராகன் உடன் கரடியை விட புலி பொருத்தமாக இருக்கும்" - விலங்கு சின்னத்தில் அரசியல் பேசிய புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கு பொருளாதார மாநாட்டில் பேசுகையில், முதல்முறையாக இந்தியா மற்றும் சீனாவின் உறவு வலுபெறுவதை 'யானை மற்றும் டிராகனின் நடனம்' என அழைத்தது ஜி ஜின்பிங் எனக் கூறியுள்ளார்.பி... மேலும் பார்க்க

ADMK: ``இது சர்வாதிகாரத்தின் உச்சம்'' - செங்கோட்டையன் பதவி நீக்கம் குறித்து ஓபிஎஸ் காட்டம்

செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட... மேலும் பார்க்க