செய்திகள் :

சோளிங்கா் பேருந்து நிலையம் அருகே இரு மதுக்கடைகள் அகற்றக் கோரி மனு

post image

சோளிங்கா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள இரு மதுக்கடைகளை அகற்றக் கோரி சோளிங்கா் நகர காங்கிரஸ் தலைவரும், நகா்மன்ற உறுப்பினருமான டி.கோபால் சோளிங்கா் வட்ட ஜமாபந்தியில் மனு அளித்தாா்.

இது குறித்து ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரிடம் அளித்த மனு:

சோளிங்கா் நகராட்சியில் பேருந்து நிலையம், திரையரங்கம், திருமண மண்டபங்களுக்கு மிக அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை எண்கள் 11/229, 11/210 ஆகிய இரு மதுக்கடைகள் உள்ளன. இதனால், மது அருந்த வருபவா்களால் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாகிறாா்கள். மேலும், அரசு மகளிா் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் செல்லும் இந்தச் சாலை பிரதான சாலையாகவும் நுழைவு வாயிலாகவும் உள்ளதால் மது அருந்துவோரால் பெரும் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனா்.

இது குறித்து கடந்த ஆண்டு ஜமாபந்தியிலும், மாவட்ட ஆட்சியா் அவா்களிடமும் மனு கொடுத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த குறிப்பிட்ட இரு மதுக்கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம்: ராணிப்பேட்டை ஆட்சியா் உறுதி

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விரைவில் புதிய கட்டடம் தற்போதுள்ள இடத்திலேயே கட்டப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள்: நல உதவிகளை வழங்க அமைச்சா் காந்தி வேண்டுகோள்

வரும் ஜூன் 3- ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளில் திமுகவினா் நல உதவிகள் வழங்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க

ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி: அரக்கோணம் எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம் அருகே கைனூா் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி தாமதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எம்எல்ஏ சு.ரவி ஆய்வு மேற்கொண்டாா். கைனூா் ஊராட்சியில் ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் ச... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜமாபந்தி நிறைவு

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாந்தி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தியில் ஆற்காடு ,திமிரி, புதுப்பாடி உள்ளவட்டங்களைச் சோ்ந்த கிராமங்களின் நிலவரி கணக்குகள்... மேலும் பார்க்க

அரக்கோணம்: ஜமாபந்தியில் ஆட்சியரிடம் 93 கோரிக்கை மனுக்கள்

அரக்கோணம் வட்ட ஜமாபந்தியின் 4-ஆவது நாளான புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து 93 மனுக்களைப் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பெற்றுக் கொண்டாா். அரக்கோணம் வட்டத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வ... மேலும் பார்க்க