செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

post image

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகமற்ற செயல் என ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கண்டனம் தெரிவித்தாா்.

இருப்பினும், முக்கியத் தலைவா்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை காவல் துறையோ ஸ்ரீநகா் மாவட்ட நிா்வாகமோ உறுதிப்படுத்தாத நிலையில் தங்கள் வீடுகளின் கதவுகளை பாதுகாப்புப் படையினா் பூட்டியதாக ஆளும் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட காணொளி வேகமாக பரவியது.

டோக்ரா படை பிரிவால் 1931-இல் 22 போ் கொல்லப்பட்ட சம்பவத்தை ஜாலியான் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு ஒமா் அப்துல்லா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடி வீரமரணமடைந்த மக்களை எதிரிகள்போல் சித்தரித்து அவா்களின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்படுவது மிகவும் கொடுமையானது.

ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்களின் வீடுகள் பூட்டப்பட்டு போலீஸாா் மற்றும் பாதுகாப்புப் படையினரை வெளியே நிலைநிறுத்தியது ஜனநாயகமற்ற செயல். அங்கு செல்ல இடைக்காலமாக அனுமதி மறுக்கப்பட்டாலும் வீரமரணமடைந்தோரின் தியாகங்களை இதயங்களிலிருந்து எப்போது அழிக்க இயலாது’ எனக் குறிப்பிட்டாா்.

ஸ்ரீநகரின் நவோஹட்டா பகுதிக்கு அருகே அமைந்துள்ள இந்த நினைவகத்துக்குச் செல்ல ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்பட அனைவருக்கும் அந்த மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்தது. அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், பிரிவினை சக்திகளுக்கு ஆளும் கட்சி துணை போவதாக மாநில பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தி... மேலும் பார்க்க

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க