செய்திகள் :

ஜாகுவார் லேண்ட் ரோவர் சிஇஓ-வாக முதல் தமிழர்! யார் இந்த பாலாஜி?

post image

டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.பி. பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் அட்ரியன் மார்டெலின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபருடன் நிறைவடையும் நிலையில், பி.பி. பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். டாடா நிறுவனத்தின் நிதி மற்றும் வளர்ச்சிக்கான உத்தியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்து வரும் இவருக்கு, தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

யார் இந்த பாலாஜி?

தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, 1992 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் பி.டெக். மெக்கானிக்கல் பட்டம் பெற்றார். பின்னர், 1993 ஆம் ஆண்டு கொல்கத்தா ஐஐடியில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

யூனிலீவர் நிறுவனத்தில் 1995 ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கிய பாலாஜி, நிறுவனத்தின் மூத்த நிதி மேலாண்மை அதிகாரியாக இந்தியா, சிங்கப்பூர், பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். 2017 வரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார். டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

டாடா குழுமத்தின் கீழ் உள்ள டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், டாடா பயணிகள் மின்சார மொபிலிட்டி, டாடா மோட்டார்ஸ் நிதி குழுமம், ஏர் இந்தியா, டைட்டன் நிறுவனம், டாடா நுகர்வோர் தயாரிப்புகள், அக்ராடாஸ் லிமிடெட் (யுகே) மற்றும் அக்ராடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாரிய (போர்ட்) உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

P.B. Balaji, a native of Tamil Nadu, has been appointed as the CEO of Jaguar Land Rover, a company owned by Tata Motors.

இதையும் படிக்க : நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேசத்தில், குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண் பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேஹூர் மாவட்டத்தில், இருந்து நாளை (ஆக.6) ஏராளமான பக்தர்கள் கன்வார் யாத... மேலும் பார்க்க

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

தன்னுடைய மறைந்த தாயின் தனியார் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.1,13,56,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை விட ஒரே நாளில் பணக்காரராகியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.வாயைப் பிளந்துகொண்டு அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டு வெடித்ததில், 24 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின், குஞ்சேபார்தி கிராமத்தின் அருகில், பிரமோத் காக்கேம் (வயது 24) எனும் இளைஞர் ஒர... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இன்றுடன் ஆறாண்டுகள் நிறைவடைந்ததையொட... மேலும் பார்க்க

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஆச்சரியத்துக்குரிய பாபா வங்கா, ஆகஸ்ட் மாதம் இரட்டை நெருப்புப் பிழம்புகள் உருவாகும் என்ற கணிப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.கடந்த 1996ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்ட ப... மேலும் பார்க்க

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் கொள்முதல் செய்யவிருப்பதாக பாதுகாப்பு துறையை சார்ந்த உயர்நிலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாதுகாப்பு விவகார அமைச்சகத்தின் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில், இந்திய கடற்படை போர் க... மேலும் பார்க்க