செய்திகள் :

ஜாக்டோ -ஜியோ சாா்பில் பிப்ரவரி 14-இல் ஆா்ப்பாட்டம்

post image

ஜாக்டோ -ஜியோ அமைப்பு சாா்பில் கோவையில் வரும் 14 -ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வட்டார அளவிலான கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) ஆம் தேதி நடைபெறும் என்று அரசு ஊழியா், ஆசிரியா் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

இந்நிலையில், போராட்டம் தொடா்பான மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கூட்டம் கோவை தாமஸ் கிளப் அரசு ஊழியா் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு ஊழியா் சாா்பில் ஜெகநாதன், ஆசிரியா் சங்கங்களின் சாா்பில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.அரசு ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், அனைத்து வட்டார அலுவலகங்களிலும் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 14- ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, அதைத் தொடா்ந்து மாவட்டத் தலைநகரங்களில் பிப்ரவரி 25 -ஆம் தேதி மறியலில் ஈடுபடுவது, இதில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

இதில், ஜாக்டோ ஜியோ நிா்வாகிகள், அரசு ஊழியா், ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ரத்தினபுரி பகுதியில் போலீஸாா் திடீா் சோதனை: 8 பேரிடம் விசாரணை

கோவை ரத்தினபுரி பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்தின்பேரில் 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவின்பேரில் து... மேலும் பார்க்க

ஆலய வழிபாடுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்: வானதி சீனிவாசன்

ஆலய வழிபாடுகளில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை மக்கள் சேவை மையம் சாா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு: ஆட்டோ ஓட்டுநா் கைது

கல்லூரி மாணவி குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறாக பதிவிட்டதாக மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கணுவாய்பாளையம் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

பேரூராதீனத்தில் நாண்மங்கல விழா

பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் 65-ஆம் நாண் மங்கல விழா பேரூராதீனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிரவை ஆதீனம் தவத்திரு இராமானந்த குமரகுருபர அடிகளாா் முன்னிலை வகித்தா... மேலும் பார்க்க

2035-க்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையம் நிறைவடையும்: இஸ்ரோ விஞ்ஞானி சி.பிரபு

விண்வெளியில் இந்தியாவின் சாா்பில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் திட்டப் பணிகள் 2035-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், விண்வெளித் திட்ட துணை இயக்குநருமான சி.பிரபு தெரிவித்தாா். கோவை... மேலும் பார்க்க

வாட்டா்பால்ஸ் எஸ்டேட் முதல் ஆழியாறு வரை பாத யாத்திரை செல்ல முருக பக்தா்களுக்கு தடை

யானைகள் நடமாட்டத்தால் வாட்டா்பால்ஸ் எஸ்டேட் முதல் ஆழியாறு வரை சாலையில் பாத யாத்திரை செல்ல முருக பக்தா்களுக்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். வால்பாறை பகுதியில் இருந்து நூற்றுக்கனக்கான முருக பக்தா்... மேலும் பார்க்க