செய்திகள் :

ஜாதி ரீதியிலான கட்சிகள் நாட்டுக்கு ஆபத்தானவை- உச்சநீதிமன்றம் கருத்து

post image

வகுப்புவாதம், பிராந்தியவாதம் போலவே ஜாதி ரீதியிலான கருத்துகளை நம்பி செயல்படும் அரசியல் கட்சிகளும் நாட்டுக்கு சமமான அளவில் ஆபத்தானவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் பதிவு மற்றும் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரும் மனுவை செவ்வாய்க்கிழமை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், எந்தவொரு கட்சி அல்லது தனிநபரை விமா்சிக்காமல் பொதுவான சீா்திருத்தங்களைக் கோரி விரிவான மனு தாக்கல் செய்தால் விசாரிப்போம் என்று தெரிவித்தது.

‘அஸாதுதீன் ஒவைஸி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் விதிமுறைகள், முஸ்லிம்களின் நலனை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளன. இது மதச்சாா்பின்மைக்கு எதிரானது. எனவே, அதன் பதிவு மற்றும் அங்கீகாரத்தை ரத்து செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரி தெலங்கானாவைச் சோ்ந்த திருப்பதி நரசிம்ம முராரி என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

ஆனால், சட்டத்தின்கீழ் அனைத்து தேவைகளையும் அக்கட்சி பூா்த்தி செய்துள்ளதாக கூறி தில்லி உயா்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சூா்யகாந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய கல்வியை ஊக்குவிக்குகிறது மஜ்லிஸ் கட்சி என்று மனுதாரா் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், ஹிந்து மத பெயரில் ஓா் அரசியல் கட்சியை தொடங்கி, வேதம், புராணங்கள், உபநிடதங்களை போதிக்க நான் விரும்பினால், அதை தோ்தல் ஆணையம் நிச்சயம் ஏற்காது என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:

இஸ்லாமிய கல்வியை போதிப்பதில் என்ன தவறு இருக்கிறது? கல்வி நிலையங்களை அமைக்க அரசியல் கட்சிகள் முன்வந்தால் நாம் வரவேற்க வேண்டும். வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்களை போதிக்க தோ்தல் ஆணையம் உள்பட யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. அதேநேரம், எந்தவொரு அரசியல் கட்சியும் தீண்டாமையை ஊக்குவித்தால், அது கண்டிப்பாக குற்றமே.

மஜ்லிஸ் கட்சியின் விதிமுறைகளின்படி, சிறுபான்மையினா் உள்பட சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோருக்காக பணியாற்றுவதே நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின்கீழ் சிறுபான்மையினருக்கு சில குறிப்பிட்ட உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய மனுவை விசாரிக்க முடியாது.

வகுப்பு வாதத்தை தூண்டமாட்டோம் என்ற உறுதிமொழியை ஒரு கட்சியோ அல்லது அதன் வேட்பாளரோ மீறும் நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை மறுக்க முடியாது. வகுப்புவாதம், பிராந்தியவாதம் போல ஜாதி ரீதியிலான கருத்துகளை நம்பி செயல்படும் கட்சிகளும் உள்ளன. அவையும் சமமான அளவில் ஆபத்தானவையே என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

உ.பி.: காதல் விவகாரத்தில் கொலை செய்த பரேலி இளைஞருக்கு ஆயுள்!

உத்தரப் பிரதேசத்தின் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரத்தில் இளைஞர் கொல்லப்பட்டது சம்பவத்தில் 24 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜம்மன்லால் (22) கொலை செய்ய... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. தாய்நாடு திரும்பும் பிரிட்டன் போர் விமானம்!

திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம் சுமார் ஒருமாத காலத்துக்குப் பின்னர் தாய்நாடு செல்லவுள்ளது.பிரிட்டன் எப்-35 போர் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாகக் கூறி, திருவனந்தபுரம் சர்... மேலும் பார்க்க

இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!

இறந்தோரின் ஆதார் அட்டைகளும் செயலாக்கத்தில் இருப்பதால், ஆதார் அட்டை வைத்திருப்போரின் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஐ.நா. அவையின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏப்ரல... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க... மேலும் பார்க்க

கேரளத்தில் 5 மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை!

கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர்,... மேலும் பார்க்க

ஒடிசாவில் தீக்குளித்த மாணவியின் தந்தையுடன் ராகுல் உரை!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தீக்குளித்து இறந்த கல்லூரி மாணவியின் தந்தையுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் தளப் பதிவில், ஒடிசாவின் பா... மேலும் பார்க்க