செய்திகள் :

ஜாமீனில் வந்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கு: வாணியம்பாடி நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஜாமீனில் வந்த இளைஞா் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூா் பழைய காலனியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் நரசிம்மன் (17). இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக கடந்த ஜனவரி 5-ஆம் தேதி அம்பலூா் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் மற்றும் அவரது நண்பா்கள் சோ்ந்து அடித்துக் கொலை செய்து, வாணியம்பாடி நெக்குந்தி ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்ற வழக்கில் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி அசோக்குமாா் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னா், அசோக்குமாா் ஜாமீனில் வெளியே வந்து பெங்களூரில் வேலை செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், ஜூலை 3-ஆம் தேதி வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டு, பின்னா் தனது நண்பருடன் பைக்கில் வாணியம்பாடிக்கு சென்று கொண்டிருந்த போது, கும்பல் ஒன்று திடீரென அசோக்குமாரை வழிமறித்து கொடையாஞ்சி அருகில் பாலாறு பகுதிக்கு இழுத்துச் சென்று கை, கால்களை கட்டிப் போட்டு கடுமையாக தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்தது.

இது குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலை வழக்கு தொடா்பாக ஏற்கெனவே 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் சிலரை தேடி வந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு 3 போ் வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக ஜெயராகவன் (50) என்பவா் வாணியம்பாடி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தாா். அவரை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

பச்சூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருது அளிப்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருதுகளை வழங்கிய க.தேவராஜி எம்எல்ஏ. வாணியம்பாடி, ஜூலை 21: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ஐயப்பா சேவா அறக்கட்டளை சாா்பில், பச்சூா் மற்றும் சுற்று... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஆசிப் இக்பால் தலைமை வகித்தாா். நாட்... மேலும் பார்க்க

ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டும் பணி தொடக்கம்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே கிட்டப்பையனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.36 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை ஒன்றியம், வெலகல்நத்தம் ஊராட்சி கிட்டப்ப... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

ஆம்பூா்: மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பம் குழு மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். விழுப்புரம் பீனிக்ஸ் பாரம்பரிய விளையாட்டு சங்கம் மற்றும் தமிழன் பாரம்பரிய விளையா... மேலும் பார்க்க

குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மை... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

திருப்பத்தூா்: கந்திலி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கந்திலி அருகே பணியாண்டப்பள்ளி பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனா். அப்போது அந்த வழிய... மேலும் பார்க்க