ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன் !
ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவனால் பரபரப்பு நிலவியது.
ஜார்க்கண்ட் மாநிலம், பர்ககானாவிலிருந்து வாரணாசிக்கு தம்பதியினர் வாரணாசி எக்ஸ்பிரஸில் செவ்வாய்க்கிழமை கிளம்பியுள்ளனர். புர்குண்டா மற்றும் பத்ரது ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் வந்தபோது, அந்தப் பெண் தனது கணவரால் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக தண்ணீர் கிடந்த பள்ளத்தில் விழுந்ததால் காயமுடன் உயிர் தப்பினார். ரயில்வே பாதுகாப்புப் படை பணியாளர்கள் அவரை மீட்டு உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை மருத்துவர்கள் ராஞ்சி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
பர்கானா ரயில்வே காவல் அதிகாரி னோகர் பர்லா கூறுகையில், காயமடைந்த பெண் ஒரு பள்ளத்தில் இருப்பதை ரயில்வே லைன் ஊழியர் ஒருவர் பார்த்து, பத்ரதுவில் உள்ள ரயில்வே போலீஸுக்கு தகவல் அளித்தார் என்றார்.
உத்தரபிரதேச மாநிலம் தேவரியாவைச் சேர்ந்த காயமடைந்த பெண் குஷ்பூ குமாரி, தனது வாக்குமூலத்தில், ஒரு வருடம் முன்பு திருமணம் செய்து கொண்ட தனது கணவருடன் பர்கானா சந்திப்பிலிருந்து வாரணாசிக்கு பயணித்துக்கொண்டிருந்தேன்.
தன்னைக் கொல்லும் நோக்கிலே, தனது கணவர் வேகமாக சென்ற ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரி மேலும் கூறினார்.
Summary
A 25-year-old man from Uttar Pradesh on Friday allegedly pushed his wife out of a running train in Jharkhand, a police officer said.