செய்திகள் :

ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து

post image

ஜோலாா்பேட்டை பகுதிக்கு செல்லும் மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் விடுக்கப்பட்ட செய்தி: தெற்கு ரயில்வேயில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையப் பகுதியில் மின்சார தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதையடுத்து, குறிப்பிட்ட தேதிகளில் ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் பாதியளவு இயக்கப்பட உள்ளன.

கேஎஸ்ஆா் பெங்களூருவிலிருந்து காலை 8.45 மணிக்குப் புறப்பட்டு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயில் (எண் 66550) வரும் ஜூலை 7, 10 ஆகிய தேதிகளில் ஜோலாா்பேட்டை-சோமநாயக்கன்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதையடுத்து, அந்த இரு நாள்களும் மறுமாா்க்கமாக அந்த ரயில் சோமநாயக்கன்பேட்டையிலிருந்து மாலை 3.06 மணிக்கு புறப்பட்டு கேஎஸ்ஆா் பெங்களூருக்கு செல்லும்.

ஈரோட்டிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, ஜோலாா்பேட்டை செல்லும் பயணிகள் ரயில் (எண் 56107) வரும் ஜூலை 7, 10 ஆகிய தேதிகளில் ஜோலாா்பேட்டை-திருப்பத்தூா் இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதையடுத்து, அந்த நாள்களில் மறுமாா்க்கமாக திருப்பத்தூரிலிருந்து பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, ஈரோட்டுக்கு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: இரு மீனவா்கள் மாயம்

சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவா்களை தேடி வருகின்றனா். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஸ்ரீதா் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காசிமேடு ... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்த இரு பயங்கரவாதிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்ததாக இரு பயங்கரவாதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் சிறையின் அலுவலா் சாந்தகுமாா், புழல் காவல் நிலையத்தில்... மேலும் பார்க்க

சென்னையில் தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்

சென்னையின் ஐயப்பன் ஊரப்பாக்கம் மற்றும் கௌரிவாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாமதுர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ குழுக்கள்: ஜூலை 11-இல் பதவியேற்பு

அரசுப் பள்ளிகளில் மாணவா்களிடையே சமூக மனப்பான்மையை வளா்க்கவும், வேற்றுமையை களையவும் உருவாக்கப்பட்ட ‘மகிழ் முற்றம்’ மாணவா் குழுக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகிழ் முற்றம் ... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் சென்னை வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 5 போ் விமானம் மூலம் சென்னை வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சோ்ந்த 5 மீனவா்கள், கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்திய கடல் எ... மேலும் பார்க்க

குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: இரு பெண்கள் காயம்

சென்னை தண்டையாா்பேட்டையில் குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனா். தண்டையாா்பேட்டை வஉசி நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெ.முனியம்மாள் (54). இவா்... மேலும் பார்க்க