செய்திகள் :

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு வா்த்தக அமைச்சா் வலியுறுத்தல்

post image

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் பலன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று வா்த்தம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவை 5% மற்றும் 18% என இரு விகிதங்களாக குறைக்கப்பட்டன. இதனால் 12% வரி விதிக்கப்பட்ட பல பொருள்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைந்தது; மேலும் பல பொருள்கள் 28%-இல் இருந்து 18% விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 5% வரி விதிப்பு இருந்த பல பொருள்கள் முழுமையாக ஜிஎஸ்டி விலக்குப் பெற்றன.

இந்நிலையில், புது தில்லியில் வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சா் கோயல் இது தொடா்பாக கூறியதாவது:

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீா்திருத்த நடவடிக்கையும் இதுவாகும். இதன் மூலம் கிடைக்கும் பலன்களை நுகா்வோருக்கு தொழில் நிறுவனங்கள் முழுமையாக அளிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி குறைப்பு மூலம் பெரும்பாலும் அனைத்துப் பொருள்கள்-சேவைகளின் விலை குறையும். இதனால் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி அதிகரிப்பை ஊக்குவித்து நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வளா்க்கும். தொழில் நிறுவனங்கள் இந்தியத் தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு சிறப்பான மாற்றங்களைக் கண்டுள்ளது. இப்போது இரு வரி விகிதங்கள் மட்டுமே இருப்பது மறைமுக வரி விதிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றமாகும். விவசாயம் தொடங்கி, சிறு, குறு தொழில்கள், மருந்து உற்பத்தி, மின்னணு சாதனங்கள், சுற்றுலா, காப்பீடு என அனைத்துத் துறைகளிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைவாா்கள்.

பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவா். சுதந்திர தின உரையின்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு சீா்திருத்தம் தொடா்பாக அவா் பேசினாா். இப்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் பல பொருள்கள் ஜிஎஸ்டி-யில் இருந்து முழுமையாக விலக்குப் பெற்றுள்ளன. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கான பரிசு மக்களுக்கு கிடைத்துள்ளது. 140 கோடி மக்களின் சிறப்பான வாழ்க்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசி... மேலும் பார்க்க

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலை... மேலும் பார்க்க

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சகினாகா பகுதியில் ஞா... மேலும் பார்க்க

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

கொல்கத்தாவில் இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி நண்பர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹரிதேவ்பூர் பகுதியின் தெற்குப் பகுதியில் 20 வயது இள... மேலும் பார்க்க

ம.பி.யில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவர் சடலம் மீட்பு

மத்தியப் பிரதேசத்தில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவரின் சடம் மீட்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மழைக்குப் பிறகு மூன்று போலீசாரை ஏற்றிச் சென்ற கார் சனிக்கிழ... மேலும் பார்க்க