செய்திகள் :

ஜிஎஸ்டி மாற்றம் நுகர்வோருக்கு முழு பலன்களை உறுதிசெய்யும்: கோயல்

post image

ஜிஎஸ்டி பலன்கள் முழுமையாக நுகர்வோருக்குச் சென்றடைவதை உறுதி செய்ய மத்திய அரசு விழிப்புடன் இருக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ரொட்டி முதல் ஹேர் ஆயில், ஐஸ்கிரீம்கள் மற்றும் டிவிக்கள் வரை அனைத்து பொதுவான பயன்பாட்டுப் பொருள்களின் விலையும் குறைக்கப்படும் என்றும் அதே நேரத்தில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான வரி விகிதம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்றும் புதன்கிழமை ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது. இது நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரவுள்ளது.

இதுதொடர்பாக பாஜக செய்தியார்களிடம் பேசிய கோயல்,

இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்க அமெரிக்கா எடுத்த முடிவு மோடி அரசை ஜிஎஸ்டி மாற்றியமைக்க தூண்டியிருக்கலாம் என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்தை அவர் நிராகரித்தார். ஏனெனில் இந்த முடிவு மாநிலங்கள், மத்திய செயலாளர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் கிட்டத்தட்ட ஒரு வருட கால ஆலோசனை செய்யப்பட்டதன் விளைவாகும் என்று அவர் கூறினார்.

ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்பட்டது எந்த நாட்டின் முடிவோடும் தொடர் இல்லை. இவ்வளவு பெரிய மாற்றம் ஒரே இரவில் நடக்காது, அமெரிக்காவின் முடிவு கடந்த மாதம்தான் எடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட்டார்.

குறைக்கப்பட்ட வரிகளின் முழுப் பலன்களையும் நுகர்வோர் பெறுவதை உறுதிசெய்ய மத்திய அரசு விழிப்புடன் இருக்கும் அதே வேளையில், மாநிலங்களும் அதைக் கண்காணிக்க வேண்டும் என்றார்.

ஜிஎஸ்டி தாமதமாக மாற்றியமைக்கப்பட்டதற்கு காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்திய அரசை சாடிய நிலையில், 2004-14 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் ஊழலில் மட்டுமே ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல ஏவுகணை முயற்சிகள் இருந்தபோதிலும் புறப்பட முடியாத ஒரு ராக்கெட் போன்றவர், முன்பு ஏதோ ஒரு விஷயத்தில் அவர் என்ன சொன்னார், இப்போது என்ன சொல்கிறார் என்பது அவருக்கே தெரியும், இவரது கருத்துகளால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதில்லை என்றார்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் விலையையும் குறைக்கும் மற்றும் தொழில்துறையின் ஒவ்வொரு துறைக்கும் பயனளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான சீர்திருத்தங்கள் என்று கோயல் பாராட்டினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட, மோடி அரசின் கீழ் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் வரி குறைவாகவே உள்ளது. அப்போது நுகர்வோர் மற்றும் தொழில்துறையினர் சிக்கலான வரி விதிப்புகளால் சுமையாக இருந்ததாகவும், ஊழல் செழித்ததாகவும் கூறப்படுகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு மறைமுக வரிவிதிப்பிலும் இவ்வளவு பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை என்று அவர் கூறினார்.

The Centre will keep vigil to ensure that the benefits of GST rationalisation are passed on fully to consumers, Union Minister Piyush Goyal said on Friday, stating that the industry has given him assurance that the entire fall in taxes on various items will be reflected in their prices.

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறி வசித்த 15 வெளிநாட்டினர் தங்களது தாயகங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தலைநகர் தில்லியில், உரிய அனுமதி இல்லமலும், விசா காலாவதியாகியும் இந்தியாவில் வசித்து வரும் வெளிநா... மேலும் பார்க்க

பா.ஜ.க. அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!

அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் கார் விற்பனை துவங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் முதல் காரை வாங்கி, கார் விற்பனையை அமோகமாகத் துவங்கி ... மேலும் பார்க்க

நடுவானில் தொழில்நுட்ப கோளாறு: இந்தூரில் தரையிறங்கிய ஏர் இந்தியா!

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் இந்தூரில் அவசரகமாக தரையிறக்கப்பட்டது. 161 பயணிகளுடன் தலைநகர் தில்லியிலிருந்து இந்தூரை நோக்கி ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை புறப்பட்... மேலும் பார்க்க

இந்தியா, ரஷியாவை சீனாவிடம் இழந்த அமெரிக்கா! டிரம்ப்பின் வஞ்சப் புகழ்ச்சியா?

சீனாவிடம் இந்தியாவையும் ரஷியாவையும் இழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.டிரம்ப்பின் சமூக வலைத்தளப் பக்கமான ட்ரூத் சோசியலில், பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்... மேலும் பார்க்க

குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?

குஜராத்தின், மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையத்தினுள் திடீரென புகுந்த ஆற்று நீரில் சிக்கி மாயமான 5 தொழிலாளிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மஹிசாகர் மாவட்டத்தின், லுன... மேலும் பார்க்க

தாணே: புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் மீட்பு

தாணேவில் புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், கல்வாவில் உள்ள கோலாய் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் சர்மா(19). இவர் மும்பையில் உள்ள முலுண்டிலிருந்த... மேலும் பார்க்க