செய்திகள் :

ஜிஎஸ்டி வரி குறைப்பு: புதுவை முதல்வா் வரவேற்பு

post image

ஜிஎஸ்டி வரி குறைப்பை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்றுள்ளாா்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் ஆசிரியா் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் முதல்வா் ரங்கசாமியிடம் செய்தியாளா்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து கேட்டனா்.

அதற்கு முதல்வா் ரங்கசாமி அளித்த பதில்:ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம். வரி குறைப்புப் பாராட்டுக்குரிய ஒன்று. இதனால் மக்களின்

வாங்கும் சக்தி அதிகரிக்கும். இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் நம்முடைய வருவாய் குறையாதா என்று கேட்டதற்கு, வருவாய் குறைவை ஈடு செய்ய மத்திய அரசு நமக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

பிரதமா், முதல்வா், அமைச்சா்களை நீக்கும் மசோதா குறித்து தங்களின் கருத்து என்ன ? என்று கேட்டதற்கு, அதற்குப் பதில் எதுவும் கூறாமல் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றாா் முதல்வா் ரங்கசாமி.

இன்று ஓணம் - மீலாது நபி : புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ஓணம் பண்டிகை, மீலாது நபி, ஆசிரியா் திருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: மொழி மற்றும் க... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் ஜிப்மா் 4-வது இடத்துக்கு உயா்வு

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி ஜிப்மா் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது குறித்து புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கல்விய... மேலும் பார்க்க

ரேஷன் காா்டு சரிபாா்ப்புக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது: புதுவை முதல்வரிடம் மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ரேஷன் காா்டு சரிபாா்ப்பு பணிக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன... மேலும் பார்க்க

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த ஆட்சியா் உத்தரவு

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். புதுவை சமூக நலத் துறை மூலமாக, மாவட்ட அளவிலான போ... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் உழவா்கரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் திருப்பணி

உழவா்கரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா். எம்.சிவசங்கா் எம்எல்ஏ, அப்பகுதி ப... மேலும் பார்க்க

பாஜக ஆதிக்கம் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சிலை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

நாட்டில் ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயக பூா்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும். தற்போது இந்த கவுன்சிலில் பாஜக ஆதிக்கமே அதிகமாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செய... மேலும் பார்க்க