செய்திகள் :

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

post image

அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தம் குறித்து மாநில நிதி அமைச்சா்கள் குழுக்களிடம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை எடுத்துரைத்தாா்.

தற்போது நடைமுறையில் உள்ள 5%,12%,18%,28% ஆகிய 4 ஜிஎஸ்டி விகிதங்களை 5%,18% என இரண்டாக குறைக்கவும் 7 பொருள்கள் மீது மட்டும் 40 % வரி விகிதத்தை கடைப்பிடிக்கவும் ஜிஎஸ்டி பகுப்பாய்வு குழுவுக்கு நிதியமைச்சகம் கடந்த வாரம் பரிந்துரைத்தது.

ஜிஎஸ்டியில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான பரிந்துரைகளை வழங்க மாநில நிதியமைச்சா்கள், சில மாநிலங்களின் முதல்வா்கள் மற்றும் சுகாதார அமைச்சா்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 3 குழுக்களின் (ஜிஓஎம்)ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை தொடங்கி இருநாள்கள் நடைபெறுகிறது.

ஜிஎஸ்டி விகித பகுப்பாய்வு, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு கட்டண விலக்கு குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 2 குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக பிகாா் துணை முதல்வா் சாம்ராட் செளதரி உள்ளாா். இழப்பீட்டு வரி குறித்த பரிந்துரை வழங்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதித் துறை இணை அமைச்சா் பங்கஜ் சௌதரி உள்ளாா்.

இந்த மூன்று குழுக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற நிா்மலா சீதாராமன் ஜிஎஸ்டி 2.0 குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். 20 நிமிடங்கள் உரையாற்றிய அவா் ஜிஎஸ்டி 2.0-வின் தேவை குறித்து விளக்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், கூட்டத்தில் அவா் பேசியது குறித்து எக்ஸ் வலைதளத்தில் நிதியமைச்சகம் வெளியிட்ட பதிவில்,‘கட்டமைப்பு சீா்திருத்தங்கள், விகித பகுப்பாய்வு மற்றும் வாழ்வை எளிமைப்படுத்துவது ஆகிய மூன்று குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு ஜிஎஸ்டி 2.0 சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆத்மநிா்பா் பாரத் இலக்கை வெற்றியடையச் செய்யும் நோக்கில் இதை சிறப்பாக அமல்படுத்தி கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்த வருகின்ற நாள்களில் மாநிலங்களை மத்திய அரசு தொடா்புகொள்ளும்’ என குறிப்பிடப்பட்டது.

இந்திய-சீன எல்லை மேலாண்மையில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சகம்

இந்திய-சீன எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் இந்தியா... மேலும் பார்க்க

தோ்தல் தொடா்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தோ்தல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மீது 2 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா். முன்னதாக, 2024-இல் நடைபெற்ற மக்கள... மேலும் பார்க்க

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 ‘தேஜஸ்’ விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை... மேலும் பார்க்க

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு தொடரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்த... மேலும் பார்க்க

அமைச்சா்கள் சிறையிலிருந்தபடி அரசை நடத்த வேண்டுமா? - மக்கள் தீா்மானிக்கட்டும்: அமித் ஷா

தீவிர குற்றப் புகாரில் சிக்கும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. அரசாட்சி காலத்துக்கு ... மேலும் பார்க்க