செய்திகள் :

ஜிம்பாப்வேவில் முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து பங்கேற்பு!

post image

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அந்நாட்டில் முத்தரப்பு டி20 தொடரை நடத்தவுள்ளது.

ஜிம்பாப்வே அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜிம்பாப்வே விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் ஜூன் மாதத்தில் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 28 தொடங்கி ஜூலை 2 வரை நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி ஜூலை 6 தொடங்கி ஜூலை 10 வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஜூலை 14 ஆம் தேதி தொடங்குகிறது.

இதையும் படிக்க: வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் ராயல்ஸ் செய்ய வேண்டியதென்ன? ராபின் உத்தப்பா பதில்!

முத்தரப்பு டி20 தொடருக்குப் பிறகு ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. போட்டிகள் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெறுகின்றன. முதல் போட்டி ஜூலை 30 தொடங்கி ஆகஸ்ட் 3 வரை நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 7 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது.

ஜிம்பாப்வேவில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறுவது குறித்து அந்த அணியின் இயக்குநர் கிவ்மோர் மக்கோனி கூறியதாவது: பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வேவில் மிகப் பெரிய சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு அவர்களது திறமையை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடவுள்ளது ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த முத்தரப்பு தொடருக்காக ஆவலோடு காத்திருக்கிறோம் என்றார்.

சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடும் விராட்கோலி! ஸ்மித்துடன் ஒரே களத்தில்..!

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற லீக் தொடரான பிக்-பாஸ் லீக்கின் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடுவது குறித்த தகவல்களை அந்த அணி உறுதிபடுத்தியிருக்கிறது.இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி தற்போது ஐபிஎல்... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+, ஷ்ரேயாஸ் உள்ளே, இஷான் வெளியே?

டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்களது ஏ+ ஒப்பந்த தரத்தை மீண்டும் தக்கவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-25ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா..!

2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தத்தினை சாம் கான்ஸ்டாஸ், மேத்திவ் குன்னஹ்மேன், பியூ வெப்ஸ்டராகிய 3 இளம் வீரர்கள் ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் டெஸ்ட் அணி கேப்டன் பதவி விலகல்! டி20 கேப்டனாகும் ஷாய் ஹோப்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட் தனது தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும், டி20 அண... மேலும் பார்க்க

கைவிடப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேசம் ஒருநாள் தொடர்; காரணம் என்ன?

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக இ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்குள் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ... மேலும் பார்க்க