செய்திகள் :

ஜீவனாம்சமாக ரூ.12 கோடி, பிஎம்டபிள்யு, மும்பை வீடு கேட்ட பெண்! பதில் கொடுத்த உச்ச நீதிமன்றம்

post image

படித்த, திறமையான பெண்கள், தங்களது வாழ்வாதாரத்துக்காக, தாங்கள்தான் சம்பாதிக்க வேண்டும், ஜீவனாசம் என்ற பெயரில், கணவரிடமிருந்து இடைக்கால பராமரிப்புகளைக் கேட்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

விவகாரத்து வழக்கில், ஜீவனாம்சம் கேட்டு பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், அப்பெண்ணைப் பார்த்து, நீங்கள் மிகவும் படித்தவர். உங்களுக்காக நீங்கள்தான் சம்பாதிக்க வேண்டும், அதை மற்றவர்களிடம் கேட்கக்கூடாது என்று கருத்துக் கூறியுள்ளார்.

கணவரிடமிருந்து ஜீவனாம்சமாக மும்பையில் ஒரு வீடு, ரூ.12 கோடி ஜீவனாம்ச தொகை, பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவற்றைக் கேட்டு, பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீங்கள் தகவல் தொழில்நுட்பத் திறன் பெற்றவர். எம்பிஏ முடித்திருக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்களுக்கு பெங்களூரு, ஹைதராபாத்தில் நல்ல வேலை வாய்ப்பு இருக்கும். ஏன் நீங்கள் வேலை செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு "மிக்-21' போர் விமானங்களுக்கு ஓய்வு

இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான "மிக்-21' போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு போர் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லை: கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

நமது நிருபர்உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் விரைவில் மக்களிடம் முழு உடல் ஸ்கேனர் கருவிகள் மூலம் பரிசோதனை

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பொதுமக்களை முழு உடல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதையொட்டி, பாடி ஸ்கேனர்கள் எனப்படும் முழு உடல் பரிசோதனை கருவிக... மேலும் பார்க்க

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் த... மேலும் பார்க்க

விமானக் கட்டணம் கடும் உயர்வு பிரச்னை: மத்திய அமைச்சர் பதில்

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்ப... மேலும் பார்க்க

8-ஆவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன்?: மத்திய அமைச்சர் பதில்

மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று மக்களவையில் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.இதற... மேலும் பார்க்க