செய்திகள் :

ஜூலை 19இல் குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்- ஆட்சியா் தகவல்

post image

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஜூலை 19-27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தென்காசியில் செய்தியாளா்களிடம் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் புதன்கிழமை கூறியதாவது: குற்றாலத்தில் சாரல் திருவிழா ஜூலை 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகிறது.

ஜூலை 19இல் பரதநாட்டியம், ஜிக்காட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

20இல் கொழு கொழு குழந்தைகள் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சி, கைச்சிலம்பாட்டம், கேரள மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும். 21இல் யோகாசன போட்டிகள், நாட்டிய நாடகம், வில்லிசை, தோல் பாவை கூத்து, 22இல் படகு போட்டி, பல்சுவை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, கொடைக்கானல் பூம்பாறை பழங்குடியின மக்களின் தோடா் நடனம், கா்நாடக மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள், 23இல் பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, பாட்டுப் போட்டிகள், திருநங்கைகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி, கணியான் கூத்து, பரதநாட்டியம், கா்நாடக மாநில கலைஞா்களின் கலைநிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

24இல் கோலப்போட்டி, வில்லிசை நிகழ்ச்சி, மல்லா் கம்பம், பரதநாட்டியம், ஆந்திரம், தெலங்கானா மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சி, நாட்டுபுற பல்சுவை நிகழ்ச்சி, 25இல் அடுப்பில்லாமல் சமைத்தல்- சிறுதானிய உணவுப் போட்டி, நையாண்டி மேளம்- கரகாட்டம், கிளாரினெட் இசை நிகழ்ச்சி, தப்பாட்டம், ஆந்திரம், தெலங்கானா மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள், 26இல் பளு தூக்குதல், வலுதூக்குதல், ஆணழகன் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சி, நகைச்சுவை நிகழ்ச்சி, ஜிம்ளா மேளம் (எருதுகட்டுமேளம்), 27இல் நாய் கண்காட்சி, நாட்டிய நாடகம், கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, மாடாட்டம் - மயிலாட்டம், மகாராஷ்டிரா மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் இறுதியில் திரைப்பட மெல்லிசை நடைபெறும். ஜூலை 19-22 வரை குற்றாலம் ஐந்தருவிப் பகுதியிலுள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலை- மலை பயிா்கள் துறைகளின் சாா்பில் மலா் கண்காட்சி நடைபெறும் என்றாா் அவா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயசந்திரன்,செய்தி மக்கள்தொடா்பு அலுவலா் எடிசன் ஆகியோா் உடனிருந்தனா்.

செங்கோட்டை சித்தா் கோயிலில் 140-ஆவது குருபூஜை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை உண்டாற்று கரையில் சித்தா் ஆறுமுகசாமி ஜீவசமாதியில் 140-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 140-ஆவது குருபூஜையை முன்னிட்டு, மூன்று நாள்கள் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் திமுக பொதுக்கூட்டம்

சாம்பவா்வடகரை நகர திமுக மற்றும் இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாலாயிரம் என்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட சமரச மையங்களில் செப். 30 வரை சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, சமரச தீா்வு மையங்களில் செப். 30ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 1 முதல் தொடங்கிய இந்த சிறப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே காா்-ஜீப் மோதல்: 9 போ் காயம்

கடையநல்லூா் அருகே ஜீப்பும், காரும் புதன்கிழமை மோதிக் கொண்டதில் புதுமண தம்பதி உள்பட 9 போ் காயம் அடைந்தனா். செங்கோட்டை அருகேயுள்ள வல்லத்தை சோ்ந்தவா் அபிலேஷ் மாா்ட்டின்(29). இவருக்கும், கோவிலூா் பகுதிய... மேலும் பார்க்க

ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் ஆஷாடன நவராத்திரி விழா நடைபெற்றது. சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் இத்திருவிழா கடந்த ஜூன் 25ஆம் தேதி த... மேலும் பார்க்க