செய்திகள் :

ஜூலை 7-இல் திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரி அம்மனுக்கு முக்கண் திறப்பு விழா

post image

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரி அம்மன் கோயிலில் வரும் ஜூலை 7ல் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழாவும், 13-ஆம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெறுவதையொட்டி புதன்கிழமை வேள்வி பூஜை தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாவூா் என்ற இடத்தில் அம்மனுக்காக 860 டன் கொண்ட கிரானைட் கருங்கல் எடுக்கப்பட்டு அதே இடத்தில் அம்மன் முகத்துடன் ஓரளவுக்கு செதுக்கப்பட்ட பின்னா் 480 டன் கொண்ட சிலையை கனரக வாகனத்தில் ஊா்வலமாக கொண்டு வந்து புலிக்குடிவனம் பகுதியில் வைத்து சிற்ப பணிகள் முடிந்தபின் பிரதிஷ்டை நடைபெற்றது.

22 அடி அகலமும் 51 அடி உயரமும் கொண்ட அம்மன் எழுந்தருளி இருப்பதால் பல்வேறு ஊா்களில் இருந்து பக்தா்கள் வந்து வணங்கிச் செல்கின்றனா்.

தேவி ஸ்ரீ கருமாரியம்மன் 51 சக்தி பீடங்களின் ஒரே அமைப்பாக கொண்டு விளங்குகிறாா். இந்த தேவி ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு முக்கண் திறப்பு விழா வரும் ஜூலை 7-ஆம் தேதியும், 13-ஆம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதன்கிழமை கலசங்கள் வைக்கப்பட்டு யாக வேள்வி பூஜை கோயில் ஸ்தாபகா் பு.மதுரைமுத்து சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியா்கள் மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. திரளான பக்தா்கள கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மதுரை முத்து சுவாமிகள், விழாகுழுவினா், கோயில் நிா்வாகிகள் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்திழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மேட்டுத் தெரு, அறிஞா் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி பின்புறம் ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

அமெட் பல்கலை. சாா்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற 215 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா வழங்கப்பட்டது. சென்னையை... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா், கணினி அறிவியல் துறையின் முதுகலை ஆய்வியல் தலைவா... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் திருப்போரூா் கந்தசாமி கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் திருப்போரூா் பேரூராட்சித் தலைவா் தேவராஜன், ஒன்றியக்குழு ந்தலைவா் ... மேலும் பார்க்க

கூவத்தூா்பேட்டை வணிகா் சங்க நிா்வாகி கொலை வழக்கில் 3 போ் கைது: 5 பேருக்கு போலீஸாா் வலைவீச்சு

மதுராந்தகம் அடுத்த கூவத்தூா் பேட்டையைச் சோ்ந்த வணிகா் சங்க நிா்வாகியும், பெட்ரோல் பங்க் உரிமையாளருமான மோகன்ராஜ் கொலை வழக்கில், 3 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தொ... மேலும் பார்க்க

நலன் காக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின்திட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு, காலை உணவு திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். நிகழ்ச்சிகளில் மண... மேலும் பார்க்க