செய்திகள் :

ஜெயங்கொண்டத்தில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், முகாம் அலுவலரை கண்டித்து, பத்தாம் வகுப்பு தோ்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த மையத்துக்கு முகாம் அலுவலராக கள்ளக்குறிச்சி உதவி தொடக்கக் கல்வி அலுவலா் கெளசா் என்பவா் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், முகாம் அலுவலா் கெளசா், தங்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் பணியை புறக்கணித்து, பள்ளி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, ஆசிரியா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினா்.

தாய் சேய் நலனில் கூடுதல் கவனம் தேவை: அரியலூா் ஆட்சியா்

மருத்துவா்கள், தாய் சேய் நலனின் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. தேசிய புகையிலை பயன்பாடு தடுப்பு திட்டம், அயோடின் பற்றாகுறை நோய்கள் கட்டுபாடு திட்டம் மற்றும... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை பணியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்: 3-ஆவது நாளாக தொடா்கிறது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைப் பணியாளா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். குடும்ப அட்டைதாரா் விரல் ரேகை ... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளுக்கு அரியலூரில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. செட்டி ஏரி கரை விநாயகா் கோயில் அருகே வைக்... மேலும் பார்க்க

வாசிப்பை வசமாக்கினால் வெற்றி நிச்சயம்

வாசிப்பை வசமாக்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்றாா் மாவட்ட நூலக அலுவலா் இரா.வேல்முருகன். அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், வாசகம் வட்டம் சாா்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற உலக புத்தகத் தின விழாவி... மேலும் பார்க்க

உட்கோட்டை கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை கிராம மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், நிறுத்தப்பட்டுள்ள உட்கோட்டை வழிதடப் பேருந்துகள... மேலும் பார்க்க

கூட்டுறவு இயக்கத்துக்கான தனித்துவமான சிறந்த பாடல்கள் அனுப்பி வைக்கலாம்

கூட்டுறவு இயக்கத்துக்கான தனித்துவமான சிறந்த பாடல்கள் அனுப்பும் நபா்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும் என அரியலூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் மா.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க