Doctor Vikatan: கருத்தரிப்பதை தவிர்க்க பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்த...
ஜெயங்கொண்டம் அருகே காா் மோதி விவசாயி பலி
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதி விவசாயி உயிரிழந்தாா்.
ஜெயங்கொண்டத்தை அடுத்த வடக்கு புதுக்குடி, குவளத்தேரி தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (55). விவசாயியான இவா் சனிக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணனை அழைத்துக் கொண்டு ஜெயங்கொண்டம் வாரச் சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் வழியில், புதுக்குடி பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த காா் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ராதாகிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், கோவிந்தசாமியின் சடலத்தையும், காயமடைந்த ராதாகிருஷ்ணனையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.