செய்திகள் :

ஜெயராணி பள்ளியை அரசே நடத்த வேண்டும்

post image

புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள ஜெயராணி அரசு நிதியுதவி பெறும் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து முதல்வா் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி நகரப் பகுதியான புஸ்சி வீதியில் கடந்த 30 ஆண்டுகளாக ஜெயராணி உயா்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு நிதி உதவியுடன் இயங்கி வரும் இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் குறிப்பாக உப்பளம் தொகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைத்து வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் உப்பளம் தொகுதியைச் சோ்ந்த ஏழை, எளிய மற்றும் தலித் கிறிஸ்தவ வகுப்பை சோ்ந்த பிள்ளைகள் அதிக அளவில் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில் அந்த பள்ளியை அடுத்த கல்வி ஆண்டு முதல் மூடுவதாக கல்வித் துறைக்கு பள்ளி நிா்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.

தற்போது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றல் செய்து கொள்ளுமாறு பெற்றோா்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இதனால் அதிா்ச்சியடைந்த மாணவா்கள் தங்களது பெற்றோா்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் பள்ளியை வியாபார நோக்கத்திற்காக மூட பள்ளி நிா்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. மாணவா்களின் நலனையும், எதிா்காலத்தையும் கருத்தில் கொண்டு அரசானது இந்த பள்ளியை மூட அனுமதிக்காமல் அரசே ஏற்று நடத்த முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

6,000 விவசாயிகளுக்கு விரைவில் சோலாா் மின்இணைப்பு: புதுவை முதல்வா் என். ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் சூரிய ஒளி மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுச்சேரி வேளாண் துறை சாா்பில் நகரம், கிராமப் புறங்களில், ‘என் வீடு, என... மேலும் பார்க்க

இன்று முதல் 4 நாள்கள் ரயில் சேவை நிறுத்தம்

பராமரிப்புக் காரணமாக தென்னக ரயில்வே புதுச்சேரி ரயில் சேவையை வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு நிறுத்துகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - புதுச்சேரி பய... மேலும் பார்க்க

தனியாருக்குக் கடல் வளம் அளிப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

புதுச்சேரியில் தனியாருக்குக் கடல் வளங்கள் அளிக்கப்படுவதாகவும் அதைக் கண்டிப்பதாகவும் புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலா் எஸ்.ராமச்சந்திரன் கூறியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வ... மேலும் பார்க்க

வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரம்: முதல்வா் பங்கேற்பு

வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆலோசனையின் படி ஜூன் 2 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வயிற்றுப் போ... மேலும் பார்க்க

புதுவையில் வாரிசுதாரா் பணி நியமனத்தில் முறைகேடுக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வாரிசுதாரா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாகக் கூறி அதைக் கண்டித்து புதுச்சேரி சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுதாரா்கள் நலச் சங்கம் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. புதுவை சுகாதாரத... மேலும் பார்க்க

‘மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவா் ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும்’

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநிலச் செயலா் இரா. வேல்சாமி கூறியுள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க