செய்திகள் :

ஜெய்சல்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

post image

ஜெய்சல்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கோட்வாலி காவல் நிலையப் பகுதியின் கீழ் கிஷன்காட்டின் முன் அமைந்துள்ள ஜோகிஸ் காலனியில் உள்ள நர்சரிக்கு அருகே இந்தப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கோட்வாலி காவல் அதிகாரி பிரேம் தன், அது வெடிகுண்டு போன்ற பொருளாகத் தெரிகிறது எனக் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிக்கையில், ராணுவத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்ய கிஷன்காட் விரைந்துள்ளனர். அது செயல் இழந்ததா என்பது தெரியவில்லை.

பொதுத் தேர்வு முடிவுகள்: நேரடி மறுகூட்டல் விண்ணப்பம் ரத்து!

உள்ளூர்வாசியான அர்ஜுன் நாத், அந்தப் பொருளைக் கண்டு உடனடியாக கிஷன்காட் சர்பஞ்ச் பிரதிநிதி கல்யாண் ராமுக்குத் தகவல் கொடுத்தார். அவர் பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறை மற்றும் இந்திய விமானப்படையின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்தப் பொருள் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஜெய்சல்மரில் பாகிஸ்தானால் ஏவப்பட்ட ட்ரோனின் பாகங்களுடன் ஒத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: இந்திய விமானப்படை

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் ... மேலும் பார்க்க

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டோமா? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளை நாம் திறந்துவிட்டோமா என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் மீண்டும் இயல்புநிலை

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை காலை இயல்பு நிலை திரும்பியது.பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம்... மேலும் பார்க்க

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், ம... மேலும் பார்க்க

மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது

மணிப்பூரில் உள்ளூர் மக்களை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்பால் மேற்கு, காக்சிங், பிஷ்ணுபூர் மற்றும் தௌபல் மாவட்டங்களில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மணிப்பூர் மாநிலத்தில் மிரட்ட... மேலும் பார்க்க