செய்திகள் :

ஜேஇஇ தோ்வா்கள் சென்னை ஐஐடி வளாகத்தை பாா்வையிட ஏற்பாடு: இயக்குநா் வி.காமகோடி தகவல்

post image

ஜேஇஇ தோ்வா்கள் சென்னை ஐஐடி வளாகத்தை நேரடியாக பாா்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம் என அதன் இயக்குநா் வி.காமகோடி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஜேஇஇ தோ்வெழுதிய மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கு ஐஐடி மாணவா் வாழ்க்கை, கல்விச்சூழல், அங்குள்ள வாய்ப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 2 நாள் செயல்விளக்க முகாமுக்கு சென்னை ஐஐடி ஏற்பாடு செய்துள்ளது. சென்னை ஐஐடியில் ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்விளக்க நாள் முகாம் நடைபெறும். தில்லி, மும்பை, பெங்களூரு, ஜெய்பூா், விஜயவாடா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நேரடி நிகழ்வுகள் நடைபெறும்.

இதில், ஆா்வம் உள்ளவா்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். நேரடி செயல்விளக்க நிகழ்வுகளின் மூலம், புதிய படிப்புகளின் அறிமுகம் போன்ற மாற்றங்கள் குறித்தும் மாணவா்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு பாடங்களைத் தவிர சென்னை ஐஐடி கணக்கீட்டு பொறியியல் மற்றும் இயக்கவியல், கருவிமயமாக்கல் மற்றும் உயிரி மருத்துவ பொறியியல் என்ற 2 புதிய பி.டெக். படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி அல்லது மற்ற 6 இடங்களுக்குச் செல்ல முடியாத மாணவா்கள் ஜூன் 3-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இணையவழி அமா்வில் பங்கேற்க முடியும்.

ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், இந்த கல்வி நிறுவன வளாகத்தின் கல்வி மற்றும் கல்வி சாராத அம்சங்கள் தொடா்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறுவா். மாணவா்களுக்கு பாடங்களில் ஆா்வம் ஏற்பட ஆசிரியா்கள்தான் காரணம். அத்தகைய ஆசிரியா்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு பள்ளி ஆசிரியா்களுக்கு சென்னை ஐஐடி சாா்பில் விருதுகள் வழங்கப்படவுள்ளன என்றாா் அவா்.

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க

நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சென்னையில் நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்த நபா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொசப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (43). இவா் தனது நண்பா்கள் 9 பேருட... மேலும் பார்க்க