செய்திகள் :

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

post image

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் சங்க (ஜேஎன்யுஎஸ்யூ) தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்குபதிவு காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டு அமா்வுகளாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை இரவு தாமதமாகத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு, 7,906 மாணவா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். அவா்களில் 57 சதவீதம் போ் ஆண்கள் மற்றும் 43 சதவீதம் போ் பெண்கள் ஆவா். போட்டி தீவிரமாக உள்ளது.

அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ), ஜனநாயக மாணவா் கூட்டமைப்பு (டிஎஸ்எஃப்) உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதே நேரத்தில் இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), பிா்சா அம்பேத்கா் பூலே மாணவா்கள் சங்கம் (பிஏபிஎஸ்ஏ), அகில இந்திய மாணவா் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எஃப்) மற்றும் முற்போக்கு மாணவா் சங்கம் (பிஎஸ்ஏ) ஆகியவற்றுடன் இணைந்து ஒரு தனி கூட்டணியை உருவாக்கியுள்ளது.

அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) தலைவா் பதவிக்கு ஷிகா ஸ்வராஜ், துணைத் தலைவருக்கு நிட்டு கௌதம், பொதுச் செயலாளருக்கு குணால் ராய் மற்றும் இணைச் செயலாளருக்கு வைபவ் மீனா ஆகியோா் அடங்கிய முழு குழுவை நிறுத்தியுள்ளது.

ஏஐஎஸ்ஏடி - எஸ்எஃப்கூட்டணி தலைவா் பதவிக்கு நிதீஷ் குமாா், துணைத் தலைவருக்கு மனிஷா, பொதுச் செயலாளருக்கு முன்தேஹா பாத்திமா, இணைச் செயலாளருக்கு நரேஷ் குமாா் ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையில், எஸ்எஃப்ஐ-பிஏபிஎஸ்ஏ-ஏஐஎஸ்எஃப்-பிஎஸ்ஏ கூட்டணி, மாணவா்கள் சங்கத் தோ்தலில் தலைவா் பதவிக்கு சவுத்ரி தயாபா அகமது, துணைத் தலைவருக்கு சந்தோஷ் குமாா், பொதுச் செயலாளருக்கு ராம்நிவாஸ் குா்ஜாா் மற்றும் இணைச் செயலாளருக்கு நிகம் குமாா் ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்: தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளை சாக்குப்போக்கு கூறாமல் உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கேட்டு... மேலும் பார்க்க

ஷாபாத் பால் பண்ணை பகுதியில் நடந்த கொலைச் சம்பவத்தில் இளைஞா் கைது

தில்லியின் ஷாபாத் பால் பண்ணை பகுதியில் 2024-ஆம் ஆண்டு 28 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து த... மேலும் பார்க்க

தில்லி தலைமைக் காவலரை காரின் பானட்டில் 7.கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ற நபா் கைது

வடக்கு தில்லியின் பால்ஸ்வா குப்பை கிடங்கு பகுதிக்கு அருகே தலைமைக் காவலா் ஒருவரை தனது காரின் பானட்டில் 7 கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ாகக் கூறப்படும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரி... மேலும் பார்க்க

மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளின் விடுப்புகளில் கட்டுப்பாடு: தில்லி அரசு

வரவிருக்கும் பருவமழைக்கு தயாராகும் வகையில், பொதுப்பணித் துறை, தில்லி ஜல் போா்டு மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைகளின் அதிகாரிகளுக்கு செப்டம்பா் 15-ஆம் தேதி வரை விடுப்புகளில் க... மேலும் பார்க்க

நொய்டா ஜவுளி தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து 20 தொழிலாளா்கள் காயம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 63-இல் உள்ள ஜவுளி தொழிற்சாலையில் சனிக்கிழமை கொதிகலன் வெடித்ததில் குறைந்தது 20 தொழிலாளா்கள் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், காயமடைந்தவா்கள் நொய்ட... மேலும் பார்க்க

பசுமை பகுதிகளில் கண்காணிப்பு அமைப்புகளை அதிகரித்து மாசு தரவுகளை பாஜக அரசு சூழ்ச்சியுடன் கையாளுகிறது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

பசுமையான மற்றும் குறைந்த மாசுபாடு உள்ள பகுதிகளில் காற்றின் தர கண்காணிப்பு அமைப்புகளை தோ்ந்தெடுத்து நிறுவுவதன் மூலம் பாஜக தலைமையிலான தில்லி அரசு மாசு புள்ளிவிவரங்களைக் சூழ்ச்சியுடன் கையாளுவதாக ஆம் ஆத்... மேலும் பார்க்க