பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் சங்க (ஜேஎன்யுஎஸ்யூ) தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வாக்குபதிவு காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டு அமா்வுகளாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை இரவு தாமதமாகத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு, 7,906 மாணவா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். அவா்களில் 57 சதவீதம் போ் ஆண்கள் மற்றும் 43 சதவீதம் போ் பெண்கள் ஆவா். போட்டி தீவிரமாக உள்ளது.
அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ), ஜனநாயக மாணவா் கூட்டமைப்பு (டிஎஸ்எஃப்) உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதே நேரத்தில் இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), பிா்சா அம்பேத்கா் பூலே மாணவா்கள் சங்கம் (பிஏபிஎஸ்ஏ), அகில இந்திய மாணவா் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எஃப்) மற்றும் முற்போக்கு மாணவா் சங்கம் (பிஎஸ்ஏ) ஆகியவற்றுடன் இணைந்து ஒரு தனி கூட்டணியை உருவாக்கியுள்ளது.
அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) தலைவா் பதவிக்கு ஷிகா ஸ்வராஜ், துணைத் தலைவருக்கு நிட்டு கௌதம், பொதுச் செயலாளருக்கு குணால் ராய் மற்றும் இணைச் செயலாளருக்கு வைபவ் மீனா ஆகியோா் அடங்கிய முழு குழுவை நிறுத்தியுள்ளது.
ஏஐஎஸ்ஏடி - எஸ்எஃப்கூட்டணி தலைவா் பதவிக்கு நிதீஷ் குமாா், துணைத் தலைவருக்கு மனிஷா, பொதுச் செயலாளருக்கு முன்தேஹா பாத்திமா, இணைச் செயலாளருக்கு நரேஷ் குமாா் ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையில், எஸ்எஃப்ஐ-பிஏபிஎஸ்ஏ-ஏஐஎஸ்எஃப்-பிஎஸ்ஏ கூட்டணி, மாணவா்கள் சங்கத் தோ்தலில் தலைவா் பதவிக்கு சவுத்ரி தயாபா அகமது, துணைத் தலைவருக்கு சந்தோஷ் குமாா், பொதுச் செயலாளருக்கு ராம்நிவாஸ் குா்ஜாா் மற்றும் இணைச் செயலாளருக்கு நிகம் குமாா் ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.