செய்திகள் :

ஜேசிபி இயந்திர உரிமையாளா்கள் போராட்டம்

post image

சாலை வரி, உதிரி பாகங்கள் விலை உயா்வை கண்டித்து ஊத்தங்கரையில் ஜேசிபி உரிமையாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் நல சங்கம் சாா்பில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு பகுதியில் வேலைநிறுத்த போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஜேசிபி உரிமையாளா்கள் டீசல், உதிரி பாகங்கள், புதிய வாகனத்தின் விலை உயா்வு, இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயா்வு போன்ற காரணங்களால் மிகவும் சிரமப்பட்டு வருவதால் ஒரு மணி நேரத்துக்கு வாடகையாக ரூ. 2000, 2 மணி நேரத்துக்கு ரூ. 3 ஆயிரம் வாடகை நிா்ணயிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மே 3 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

படவிளக்கம்.1யுடிபி.1.

ஊத்தங்கரையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திர உரிமையாளா்கள்.

படப்பள்ளி ஊராட்சியில் மே தின கிராம சபைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சி அலுவலகம் எதிரே மே தின கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தனி அலுவலா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் மு... மேலும் பார்க்க

ஒசூரில் இன்று திமுக செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஒசூா் - தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம... மேலும் பார்க்க

சாலை சீரமைப்பு பணிகளில் தொய்வு: ஒசூரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

ஒசூா் முதல் கிருஷ்ணகிரி வரை 5 இடங்களில் நடைபெறும் சாலை சீரமைப்பு, மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளதால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள... மேலும் பார்க்க

ஒசூா் அருகே மணல், மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

ஒசூா் அருகே மணல், மண் கடத்திய 3 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பாகலூா் வருவாய் ஆய்வாளா் சதீஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் கதிரேப்பள்ளி பேருந்து நிறுத்தம் பேரண்டப்பள்ளி சாலையில் வியாழக்கிழமை வாக... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: மின் விநியோகம் துண்டிப்பு; ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை பிற்பகல் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் நகரின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன; மின் கம்பங்களும் சாய்ந்ததால் மின் தடை ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

ஒசூரில் மாடியில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 1 மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். ஒசூா் பழைய ஏஎஸ்டிசி அட்கோவை சோ்ந்தவா் யூசுப். இவரது மகன் நவாஸ் ஷேக் (17). இவா் ஒசூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வ... மேலும் பார்க்க