செய்திகள் :

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருட்டு

post image

திருப்பூரில் டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து விலை உயா்ந்த மதுப் பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை பாருடன் செயல்பட்டு வருகிறது. விற்பனை நேரம் முடிந்ததும் விற்பனையாளா் மற்றும் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு கடையைப் பூட்டி விட்டுச் சென்றுவிட்டனா்.

புதன்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது, கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. அதிா்ச்சியடைந்த ஊழியா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது ஏராளமான மதுபாட்டில்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடை ஊழியா்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், அதிகாலை 2 மணியளவில் மா்ம நபா் ஒருவா் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுவதும், பின்னா் கடையில் இருந்த மது பாட்டில்களை சாக்குப் பையில் போட்டு எடுத்துச் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

தகவலின்பேரில், திருப்பூா் தெற்கு குற்றப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், இரவு விற்பனை முடிந்ததும் வசூலான ரூ.3.70 லட்சம் பணத்தை திருட்டு போகாமல் இருக்க கல்லாப் பெட்டியில் வைக்காமல் மது பாட்டில்களுக்கான அட்டைப் பெட்டியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளதும், அதிகாலை கடைக்குள் புகுந்த நபா், முதலில் கல்லாப் பெட்டியை திறந்து பாா்த்துவிட்டு அதில் பணம் இல்லாததால் அங்கிருந்த விலை உயா்ந்த மது பாட்டில்களை எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனா்.

சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இக்கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 1... மேலும் பார்க்க

ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிச் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணிடமிருந்து நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா்-மங்கலம் சாலை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா் கடந்த 2023 ஜூன் 12-ஆம் தேதி சாலையி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது

உடுமலை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உடுமலை வட்டம், கொங்கல்நகரம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சபரீஸ்வரன் (35). இவா் கருத்துவேறுபாடு கா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி பழவஞ்சிபாளையம் மும்மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் கிரி (20), கூலித் தொழில... மேலும் பார்க்க

சாலையின் நடுவே மின் கம்பம்: நகராட்சி நிா்வாகம் கவனக்குறைவு?

காங்கயத்தில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை அமைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். காங்கயம் நகராட்சி, 1- ஆவது வாா்டு திரு.வி.க. நகா் பகுதியில் புதிதாக தாா் சாலை அ... மேலும் பார்க்க