`முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு' - கருப்பு கொடி காட்டி கரும்பு விவசாயிகள்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு: 5,796 போ் எழுதினா்
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி 1 முதல் நிலை தோ்வை 5,796 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி 1 முதல் நிலை தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தோ்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் 29 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வுக்கென 29 ஆய்வு அலுவலா்கள், 6 நடமாடும் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டனா். ஈரோடு மாவட்டத்தில் இத்தோ்வினை எழுத 7, 651 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில் 5,796 போ் தோ்வு எழுதி உள்ளனா். 1,855 போ் தோ்வு எழுதவில்லை.