செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு!

post image

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று(செப். 28) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ்வுக்கான பதவிகள்) மற்றும் 2 ஏ நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கான தோ்வு நடைபெற்றது.

எழுத்துத் தேர்வை 4,18,791 பேர் எழுதியதாகவும், 1.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்றும்,முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.

மேலும், “குரூப் 4 ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும். 2026-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி-யின் காலஅட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுவும் டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும்" என்றார்.

TNPSC Group 2 Exam Results to be released in December!

விஜய் பிரசாரத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் மனு!

விஜய் பிரசாரத்துக்கும் பொதுக்கூடங்களுக்கும் அனுமதியளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.கரூரில் விஜய... மேலும் பார்க்க

விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதன... மேலும் பார்க்க

கரூரில் 40 பேர் உயிரிழப்புக்கான முக்கிய காரணம் என்ன? தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் விளக்கம்!

கரூர்: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழக்க காரணம் என்ன? என்பதை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் விளக்கியுள்ளார்.கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் மயக்கமடைந்த... மேலும் பார்க்க

கரூர் பலி: முதல்வரிடம் தொலைபேசியில் விசாரித்த ராகுல் காந்தி!

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விசாரித்தார். இதனை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் குறிப்ப... மேலும் பார்க்க

அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன: கரூர் மாவட்ட ஆட்சியர்

அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு தெரிவித்தார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயி... மேலும் பார்க்க

கரூர் பலி: யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை - கனிமொழி

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தில் யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு படுகா... மேலும் பார்க்க