செய்திகள் :

டிக்கெட் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.50,000 பரிசு வழங்கும் மத்திய ரயில்வே - ஏன் தெரியுமா?

post image

மத்திய ரயில்வே (CR) லக்கி யாத்ரி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது தினசரி உள்ளூர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது மத்திய ரயில்வே.

இந்த திட்டத்தின் மூலம் தினமும் டிக்கெட் எடுத்து ரயிலில் பயணிக்கும் ஓர் அதிர்ஷ்டசாலி பயணிக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசும், வாரம் பம்பர் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Train

எட்டு வாரங்களுக்கு நீடிக்கும் இந்த திட்டம் டிக்கெட் அல்லது சீசன் பாசுடன் பயணிகள் பயணிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனால் எந்த ஒரு டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. FCB இன்டர்ஃபேஸ் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் இந்த திட்டத்திற்கு பங்களித்துள்ளது.

மத்திய ரயில்வேயில் சராசரியாக ஒரு நாளைக்கு 40 லட்சம் பேர் பயணிக்கின்றனர். டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களின் பங்கு 20% என தோராயமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதில் டிக்கெட் பரிசோதனை செய்பவர்களால் தினமும் 4000 முதல் 5000 பேர் வரை டிக்கெட் இல்லாமல் பயணித்ததற்காக பிடிப்படுகின்றனர்.

இதனை தடுக்கும் வகையிலும், பயணிகள் டிக்கெட் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையிலும், டிக்கெட் எடுத்து பயணிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ரயில் நிலையங்களில் திடீரென டிக்கெட் அல்லது சீசன் பாசை காண்பிக்கும்படி கேட்பார்கள், சரி பார்த்த பிறகு ரொக்க பரிசு உடனடியாக வழங்கப்படும் என மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறியிருக்கிறார்.

Madhapar: ரூ.7000 கோடி வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் குஜராத் கிராமம்; சுவாரஸ்ய பின்னணி!

ரூ.700 கோடி வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக வைத்திருக்கும் பணக்கார கிராமத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.குஜராத்தின் போர்பந்தர் நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம்தான் மாதபர்.... மேலும் பார்க்க

சீனா: அவசர நேரத்தில் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்; நெகிழ வைத்த நிகழ்வு!

தாய்க்கு எதிர்பாராத விதமாகப் பிரசவ வலி ஏற்பட்ட போது, துணிச்சலுடன் செயல்பட்டு பிரசவம் பார்த்து தனது தம்பி பூமிக்கு வர உதவியிருக்கிறார் 13 வயது சிறுவன். மருத்துவப் பணியாளர் மொபைலில் தொடர்பில் இருக்கும்ப... மேலும் பார்க்க

`இது கிராமமா கேன்சர் மண்டலமா?’ - அதிர்ச்சியில் ஆந்திர அரசு - விளக்கம் தரும் மருத்துவர்

இது கிராமமா அல்லது இந்தியாவின் புற்றுநோய் மண்டலமா என்று தகவல் தெரிந்த பலரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலபத்ரம் என்கிற சிறு கிராமம். அப்படி ... மேலும் பார்க்க

தாய்ப்பால் சுவையில் ஐஸ் கிரீமை அறிமுகப்படுத்தும் அமெரிக்க நிறுவனம் - நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?

தாய்ப்பாலுக்கு நிகரான உணவு ஏதும் இல்லை என்று கூறிவரும் நிலையில், அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. கர்ப்ப காலத்தைப் ப... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: எம்.பி-க்கள் சம்பளம் உயர்வு டு ATM கட்டணம் உயர்வு - இந்த வார க்விஸ்க்கு ரெடியா?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு, ஏடிஎம் கட்டணம் உயர்வு, இளையராஜாவுக்கு பாராட்டு விழா அறிவிப்பு, சர்வதேச கால்பந்து போட்டியில் கின்னஸ் சாதனை என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வி... மேலும் பார்க்க

`எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' - குணால் கம்ராவை கைது செய்ய சிவசேனா அமைச்சர் கோரிக்கை

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து வெளியில் வந்ததை சித்திரிக்கும் விதமாக, அவரை துரோகி என்று விமர்சித்து காமெடி நடிகர் குணால் கம்ரா காமெடி ஷோவில் பாடினார். மும்பையில் இக்காமெட... மேலும் பார்க்க