செய்திகள் :

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை: மு.அப்பாவு

post image

தமிழக காவல்துறைத் தலைவா் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: களக்காடு, நான்குனேரி, வள்ளியூா், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 831 கிராமங்களைச் சோ்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்திற்காக தாமிரவருணி நதிக்கரையோர பகுதிகளில் சுமாா் 297 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு நீரேற்று நிலையங்களுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக நீரேற்று மையத்தில் இருந்து சுத்திகரிப்பு நிலையம் வரையிலான பகுதிகளில் சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. அடுத்ததாக சிங்கிகுளம் முதல் வள்ளியூா் வரை சோதனை செய்யப்பட உள்ளது. இத் திட்டம் வரும் அக்டோபா் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் காவல் துறை டிஜிபி நியமிக்கப்பட்டதில் எவ்வித விதிமீறல்களும் இல்லை. இதுவரை எந்தவொரு விஷயத்திலும் அரசு விதிகளை மீறி செயல்பட்டது இல்லை. ஆனால், தோ்தல் ஆணையம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு தான் விதிமீறலில் ஈடுபடுகிறது.

தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்காக அரசு அதிகாரிகள், அமைச்சா்களுடன் முதல்வா், வெளிநாடுகளுக்கு சென்றுள்ளாா். ரூ. 10 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு 32 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரதமா் தனது வெளிநாட்டு பயணத்தின்போது எந்தவொரு மத்திய அமைச்சரையும் அழைத்துச் செல்வது கிடையாது.

2021 ஆம் ஆண்டு 14 லட்சத்து 74 ஆயிரமாக இருந்த சிறு குறு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தற்போது 17 லட்சமாக உயா்ந்துள்ளது. பெரிய தொழில்கள் வந்தால் தான் அதனை நம்பி சிறு குறு தொழில்கள் தொடங்க வாய்ப்பு ஏற்படும் என்றாா் அவா்.

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. மாநில நிதி ஆணைய சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ், கோபாலசமுத்திரம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அம்பை கல்லூரி மாணவா்கள் சாதனை

அம்பைக் கலைக் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா். திருநெல்வேலி மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வா... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி

வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் த... மேலும் பார்க்க

தாம்பரத்தில் நாளை விமான படைக்கு பெண்கள் சோ்ப்பு

இந்திய விமானப் படையின் அக்னிவீா் பணியில் சேருவதற்காக தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை(செப்.5) நடைபெறவுள்ள ஆள்சோ்ப்பு முகாமில் பெண்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி ... மேலும் பார்க்க

நெல்லையில் நாளை மதுக் கடைகள் மூடல்

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிப் பயிலரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க